வைகோவை அடையாளம் கண்டு புன்னகைத்த கருணாநிதி
இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தன்னை சந்திக்க வந்த வைகோவை அடையாளம் கண்டு புன்னகைத்தார் திமுக தலைவர் கருணாநிதி.
சென்னை: கோபாலபுரம் வீட்டில் தன்னை சந்திக்க வந்த வைகோவை அடையாளம் கண்டு கொண்ட கருணாநிதி புன்னகையோடு வரவேற்றார்.
முதுமை காரணமாக கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக திமுக தலைவர்கருணாநிதி ஓய்வெடுத்து வருகிறார். அவரை அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். தன்னை சந்திக்க வரும் அரசியல் தலைவர்களைப் பார்த்து புன்னகைக்கிறார் கருணாநிதி.

தி.மு.க தலைவர் கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரிக்க ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கோபாலபுரம் சென்றார். வைகோவை தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
அதே மகிழ்ச்சியோடு அவர் கருணாநிதியைச் சந்தித்தார். அவரது உடன் நலன் குறித்து, ஸ்டாலின் மற்றும் உறவினர்களிடம் விசாரித்தார். வைகோ வந்திருப்பதை கருணாநிதியிடம் கூறினார் ஸ்டாலின். இதனையடுத்து தலையை சற்றே தலையை தூக்கிப் பார்த்த கருணாநிதி, புன்னகைத்தார்.
வயது முதிர்வு அவரது பேச்சைத்தான் சற்றே தடுத்திருக்கிறது. ஆனால் அவரது அபார நினைவாற்றலை தடுக்கவில்லை என்பதை இந்த புன்னகையே உணர்த்திவிட்டது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கருணாநிதியும் வைகோவும் சந்தித்து பேசியுள்ளனர். இது உணர்ச்சிகரமான சந்திப்பாகவே அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications