நான் தோலைத் தானே சாப்பிட்டேன்... சுளையை சாப்பிட்டவர்களுக்கு என்ன தண்டனை ? - 'அக்ரி'க்காக கருணாநிதி
சென்னை: பதவி பறிப்பு மூலம் திருநெல்வேலி விவசாய அதிகாரி தற்கொலை செய்து கொண்டதற்கு முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தான் காரணம் என்பது தெள்ளத் தெளிவாகி விட்டதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
நெல்லையைச் சேர்ந்த, வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை விவகாரத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் அமைச்சர் பதவி பறிக்கப் பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

திருநெல்வேலியில் மூத்த அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதற்கு அமைச்சர் ஒருவரே காரணம் என்றும், அவர் மீது அ.தி.மு.க., அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்று பார்க்கலாம் என, கூறியிருந்தேன். அது உண்மை என்பதை ஒப்புக்கொண்டு, அ.தி.மு.க., அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆமாம். நடவடிக்கை எடுக்கா விட்டால், என்ன ஆகும் என்பதை புரிந்து கொண்டே, வேறு வழியின்றி அவரிடமிருந்து, கட்சி பதவியையும், அரசு பதவியையும், அ.தி.மு.க., பறித்துள்ளது.
இதிலிருந்து, அந்த மூத்த அதிகாரியின் தற்கொலைக்கு யார் காரணம் என்பது தெளிவாகப் புரிந்து விட்டதல்லவா? ஆனால், பதவிகளைப் பறி கொடுத்தவர்கள், 'அதிகாரியின் சாவுக்கு நான் மட்டுமா காரணம், நான் தோலைத் தானே சாப்பிட்டேன். உண்மையில் சுளையை சாப்பிட்டவர்களுக்கு, எந்த தண்டனையும் கிடையாதா' என கேட்கின்றனர்.
ஏற்கனவே, ஒரு முறை அக்ரி கிருஷ்ணமூர்த்தி அமைச்சராக இருந்தபோது, ஏதோ தவறு செய்தார் என்பதற்காகத்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அவருக்கு மீண்டும் பதவி கொடுக்கப்பட்டது. எதற்காக எடுக்கப்பட்டது. பிறகு, ஏன் கொடுக்கப்பட்டது என்பதெல்லாம், இந்த ஆட்சியில் வேடிக்கை தான்.
கொலு கொண்டாடுபவர்கள் வைக்கப்படும் பொம்மைகளை ஒவ்வொரு நாளும் மாற்றி, மாற்றி வைப்பது போலத்தான், அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சரவை மாற்றங்கள்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications