மத்திய அரசு ஒதுக்கும் நிதியை தமிழக அரசு முறையாக செலவிடவில்லை: கருணாநிதி குற்றச்சாட்டு
சென்னை: தமிழகத்தின் தேவைகளை மத்திய அரசு புறக்கணிப்பதாக அதிமுக அரசு குறை கூறி வருகிறது. ஆனால், மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்காக ஒதுக்கும் நிதியை, தமிழக அரசு முறையாகச் செலவிடவில்லை என திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
தமிழகத்தின் தேவைகளை மத்திய அரசு புறக்கணிப்பதாக அதிமுக அரசு குறை கூறி வருகிறது.இப்படிக் குறை நேரத்தில் கூறும் நேரத்தில் மத்திய அரசு, தமிழகத்துக்காக ஒதுக்கும் நிதியையாவது முறையாகச் செலவிட முன் வரவேண்டாமா நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தின் சென்னை மண்டல தலைமைப் பொது மேலாளர் ஐ.ஜி.ரெட்டி, தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லாததால், தமிழகத்தில் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்புள்ள தேசிய நெடுஞ்சாலைத் திட்டப்பணிகள் முடங்கி உள்ளன என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.இதே குற்றச்சாட்டினை மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சரும் தெரிவித்துள்ளார்.

சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் தொடர்பாக நானே (கருணாநிதி) பல முறை குறிப்பிட்டுள்ளேன்.ரூ.1885 கோடி மதிப்பிலான துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை ரூ.900 கோடி வரை செலவு செய்த பிறகு, ஓராண்டாகக் கிடப்பில் போட்டுள்ளனர்.இந்தப் பணியை நிறைவேற்றுவதற்காக ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனம் ரூ.900 கோடி வரை இழப்பீடு கேட்டு வழக்கு தொடுத்துள்ளது.அந்த இழப்பீட்டுத் தொகையை யார் கணக்கில் சேர்ப்பது முதல்வர் என்றால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்றால், மக்கள் வரிப்பணி அல்லவா வீணாகிறது.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு தமிழக அரசிடமிருந்து இதுவரை எந்தப் பதிலும் இல்லை.மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சரும், அந்தத் துறையின் உயர் அதிகாரியும் வெளிப்படையாக தமிழக அரசின் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.அதற்கு முதல்வரோ, அந்த துறையின் அமைச்சரோ பொறுப்புணர்வோடு பதில் சொல்லியிருக்க வேண்டாமா
யாரும் பதில் அளிக்காததில் இருந்து அது உண்மை என்றாகி விடுகிறது.மாநில அரசுக்குத் தேவையான நிதியைக் கேட்பது உரிமை. ஒதுக்கப்பட்ட நிதியை முறையாகச் செலவழிக்க வேண்டியது கடமை. உரிமையைக் கேட்கும் நேரத்தில் கடமையை மறந்துவிடலாமா' என இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications