பன்னீருக்கு அழகு மவுனம் காத்தல்
நான் 4-ந் தேதி சட்டசபையில் பங்கேற்பதற்கு எந்தவிதமான தடையும் இல்லை. அதற்கு எந்தத் தைரியமும் தேவையில்லை. ஆனால் உங்கள் "அம்மா"? இந்தக் கேள்வியைக் கேட்கும்படி வைத்தது நீங்கள்தானே? "கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கொண்டு கல் எறிய முற்படலாமா?"

மேலும் பன்னீர்செல்வம் தனது அறிக்கையில், "சட்டசபையில் தமிழக அரசை விமர்சிப்பதற்கு ஏதேனும் பொருள் இருக்கிறது என்று கருணாநிதி கருதுவாரேயானால்" என்றெல்லாம் கேட்டிருப்பதால், சட்டமன்றத்தில் அல்ல, இதோ மக்கள் மன்றத்தின் முன்னாலேயே அ.தி.மு.க. அரசைப் பற்றிய பிரச்சினைகள் இந்த மூன்றரை ஆண்டுக் காலத்தில் அடுக்கடுக்காக மலை போல் குவிந்து கிடக்கின்றன.
அ.தி.மு.க. ஆட்சியின் அவலங்களைப் பற்றி நாள் கணக்கில் பேசுவதற்கு ஏராளமான பொருள்கள் தாராளமாகவே இருக்கின்றன. ஏன் நீங்கள் வாயைக் கொடுத்து வம்பை விலைக்கு வாங்கிக் கட்டிக் கொள்கிறீர்கள்? முதலமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு வரை இருந்து வந்ததைப் போல, அமைதியாக இருப்பதுதான் பன்னீருக்கு அழகு; நாட்டிற்கும் நல்லது. எனவே பன்னீருக்கு அழகு, மவுனம் காத்தல்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications