புல் பூண்டுகளே இல்லாமல் திராவிட இயக்கத்தை அழித்துவிட முடியாதா என கனவு காண்கிறார்கள்
அந்த நம்பிக்கையிலேதான் கடந்த சில வாரங்களாக ஒரு சிலர், அந்தத் தந்திரத்தில் ஈடுபட்டு, நம்முடைய அகம் குளிர்ந்திருப்பதைக் கண்டு, அப்படி குளிரவைத்தவர்கள் நாம்தானே; தொடர்ந்து இப்போது நாம் ஆற்றி வருகிற பணியின் மூலம் அறவே புல் பூண்டுகளே இல்லாமல் இந்தத் திராவிட இயக்கத்தை அழித்துவிட முடியாதா என்று கனவு காண்கிறார்கள்.

இவர்கள் கனவு முடிந்து, அதன் தொடர்பாக கதைகளைக் கட்டி, இந்தக் கழகத்தில் கலகம் விளைவித்து, அதன் மூலம் தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வோம் என்று திராவிட இயக்கத்தைத் தரைமட்டமாக்கி விடுவோம் என்று மனப்பால் குடிப்பவர்களுக்கு இடம் கொடுக்காமல், உடன்பிறப்பே, வஞ்சகம் புரிந்தும், இச்சகம் பேசியும் நம்மை நெருங்குவோர் யாராயினும், அவர்கள் எப்போதும் நம்மை வெறுப்பவர்களே என்பதைப் புரிந்து கொண்டு அவர்களை விட்டு விலகி நின்று உயிரனைய நம்முடைய கழகத்தை வளர்ப்போம். திமுக கொடியை உயர்த்திப் பிடிப்போம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications