சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறப்போகிறோம் என்ற கருத்து கணிப்பை உறுதிப்படுத்த வேண்டும் - கருணாநிதி
திருவாரூர்: வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறப்போகிறோம் என்ற என்ற கருத்து கணிப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று திருவாரூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் திருவாரூர் தெற்கு வீதியில் இன்று மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திமுக தலைவர் கருணாநிதி பேசியது:

கடந்த சில காலங்களாக கூட்டங்களில் பேச முடியாத சூழல் இருந்தது. ஆனால் திருவாரூர் வந்தால் பேசித்தான் ஆக வேண்டும். திருவாரூர் வந்தால் என்னை பேச வைத்து விடும் என்று கூறினார்.
மேலும் கூட்டத்தில் அவர் பேசுகையில், தமிழை காக்க, தமிழர் நலன் காக்க இந்த கூட்டம் நடைபெறுகிறது. வீரர்களின் அடையாள விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தமிழகத்தில் தடை விதித்துவிட்டார்கள். ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி தமிழக அரசு வாதாடவும் இல்லை போராடவும் இல்லை.
200 ஆண்டு பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தில் நடத்திட தமிழர்கள் தொடர்ந்து போராட வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஜல்லிக்கட்டு தடையை நீக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினார். வீர விளையாட்டை வேண்டாம் என்று கூறுபவர்கள் தமிழர்கள் இல்லை.
தமிழர்களை கோழையாக்கும் செயல் தமிழ்நாட்டில் இன்றைக்கும் இருக்கிறது. விரைவில் அந்த கூட்டத்தை வீழ்த்த வேண்டும். தமிழனை கோழையாக்கினால் தான் அடக்கி ஆள முடியும் என சிலர் சதி செய்கிறார்கள். கோணல் புத்திக்காரர்களை வீழ்த்த பகுத்தறிவை பயன்படுத்தி தமிழர்களை ஒடுக்க நினைத்து செயல்படுவோரை வீழ்த்த முடிவெடுங்கள்.
வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறப்போகிறோம் என்ற கருத்து கணிப்புகளை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு கருணாநிதி உரையாற்றினார்.












Click it and Unblock the Notifications