இனிமே இங்கதான் கருணாநிதியை 'தரிசிக்க' போகிறார்கள்!
Recommended Video
சென்னை: உடல்நலக்குறைவால், காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த, ஆகஸ்ட் 7ம் தேதி மரணம் அடைந்தார்.
இந்த நிலையில், கருணாநிதிக்கு, திமுக தலைமையகமான சென்னையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் சிலை நிறுவப்பட உள்ளது. இந்த சிலை முழுக்க முழுக்க வெண்கலத்தால் செய்யப்பட்டது. இதை மிகவும் தத்ரூபமாக வடிவமைத்து இருக்கிறார்கள். இந்த சிலையை வடிவமைக்க இரண்டு வாரம் ஆனதாக கூறப்படுகிறது. இன்னும் இதில் சில கடைசி கட்ட பணிகள் மட்டும் செய்யப்பட்டு வருகிறது.
சிலையை திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரைச் சேர்ந்த சிற்பி தீனதயாளன் வடிவமைக்கிறார். இவர் இதற்கு முன்பே தலைவர்களுக்கு சிலை வடிவமைத்துக் கொடுத்தவர். சில கோவில் சிலைகளையும் வடிவமைத்துள்ளார். இவரின் கைவண்ணத்தில்தான் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்படவுள்ள தலைவர் கலைஞர் அவர்களின் 8 அடி உயர முழு வெண்கல திருவுருவச்சிலை வடிவமைப்புப் பணிகளை கழக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் பார்வையிட்டார். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலை உருவாகி வருகிறது. pic.twitter.com/pYE2yNS765
— DMK - Dravida Munnetra Kazhagam (@arivalayam) September 11, 2018
அறிவாலயம் உள்ளே நுழைந்ததும் நடுவில் தற்போது அண்ணா சிலை இருக்கிறது. அண்ணாவின் சிலைக்கு அருகிலேயே கருணாநிதியின் சிலை வைக்கப்பட இருக்கிறது. இதற்காக அங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதற்காக மார்க் செய்யும் பணிகள் முடிந்துவிட்டன.