காலையிலேயே வாக்களித்த கருணாநிதி, தமிழிசை சவுந்தரராஜன், சீமான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி, பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் வாக்குப்பதிவு துவங்கியதும் வாக்களித்தனர்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர மீதமுள்ள 232 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது. அந்த இரண்டு தொகுதிகளிலும் வரும் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.

Karunanidhi, Tamilisai cast their votes

இன்று காலை வாக்குப்பதிவு துவங்கியவுடன் திமுக தலைவர் கருணாநிதி கோபாலபுரத்தில் தனது வீட்டிற்கு அருகில் உள்ள சாரதா நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார்.

இதே போன்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை சாலிகிராமத்தில் உள்ள காவிரி உயர்நிலைபள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் காலையிலேயே வாக்களித்தார். வாக்களித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை கூறுகையில், மக்கள் அனைவரும் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்றார்.

சென்னை சாலிகிராமம் சேவா சமாஜம் பள்ளியில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வாக்களித்தார். சட்டசபை தேர்தலில் வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+