திருவாரூர் புறப்பட்டு சென்றார் கருணாநிதி.. 2 நாள் தீவிரப் பிரச்சாரம்
சென்னை: தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ள திமுக தலைவர் கருணாநிதி இன்று ரயில் மூலம் திருவாரூர் புறப்பட்டுச் சென்றார். 2 நாட்கள் அங்கு தீவிரப் பிரச்சாரத்தில் அவர் ஈடுபடுகிறார்.
திருவாரூர் தொகுதியில் 2வது முறையாக போட்டியிடும் கருணாநிதி, ஏப்ரல் 25ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அதன் பின்னர் தமிழக அளவில் சுற்றுப்பயணம் செய்தார்.

இந்த நிலையில் மீண்டும் இன்று மற்றும் நாளை அவர் திருவாரூரில் பிரச்சாரம் செய்யவுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து ரயில் மூலம் திருவாரூர் புறப்பட்டுச் சென்றார். திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் அவருடன் உடன்சென்றனர்.
திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள தனது இல்லத்தில் தங்கும் அவர் இன்று மற்றும் நாளை திருவாரூர் தொகுதியில் பல்வேறு பகுதிகளுக்கும் வேன் மூலம் சென்று பொதுமக்களை சந்தித்து தனக்கு ஆதரவு திரட்டுகிறார்.
இன்று திருவாரூர் நகர் பகுதிகளிலும், நாளை ஒன்றிய பகுதிகளிலும் வாக்கு சேகரிக்கிறார். பின்னர் சென்னை திரும்பும் கருணாநிதி, 14ம் தேதி சென்னையில் கடைசி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபடுவார்.












Click it and Unblock the Notifications