தமிழ் மக்களுக்காக எமனோடும் போராடி திரும்பி வருவேன் என்றார் கருணாநிதி: வாகை சந்திரசேகர்
Recommended Video

சென்னை: தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் சேவை செய்ய எமனோடும் போராடி திரும்பி வந்துவிடுவேன் என்று திமுக தலைவர் கருணாநிதி முன்பு கூறியதாக எம்.எல்.ஏ. வாகை சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வயது மூப்பு காரணமாக அவரது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக உள்ளது, 24 மணி நேரத்தில் சிகிச்சைக்கு கருணாநிதி எப்படி ஒத்துழைக்கிறார் என்பதை பொறுத்தே கணிக்க முடியும் என்று காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து திமுக எம்.எல்.ஏ. வாகை சந்திரசேகர் கூறியதாவது,
அனைத்து போராட்டங்களையும் சந்தித்து வெற்றி கண்டவர் கருணாநிதி. நான் 100 ஆண்டுகள் வாழ்வேன் என்று அவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்தார்.
ஒரு வேளை எனக்கு ஏதாவது நடந்தால் நான் தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் சேவை செய்ய எமனோடு கூட போராடி 100 ஆண்டுகள் வாழ்வேன் என்றார். அதனால் அவர் நிச்சயம் திரும்பி வருவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.
வாகை சந்திரசேகரை போன்றே திமுக தொண்டர்களும் நம்பிக்கையுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications