For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெற்கட்டும் செவல் வந்த கருணாஸ் கார் கண்ணாடி உடைப்பு - 3 பேர் கைது

நெற்கட்டும்செவலில் பூலித்தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த கருணாஸ் எம்எல்ஏவின் கார் கண்ணாடியை உடைத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Google Oneindia Tamil News

நெல்லை: நெற்கட்டும் செவலில் பூலித்தேவர் பிறந்தநாளில் பங்கேற்க வந்த எம்.எல்.ஏ. கருணாசுக்கு சொந்தமான கார் கண்ணாடியை உடைத்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் நெற்கட்டும்செவலில் பூலித்தேவர் பிறந்தநாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பூலித்தேவனின் பிறந்தநாளையொட்டி நெற்கட்டும்செவல் சென்ற எம்.எல்.ஏ. கருணாஸ்க்கு சொந்தமான 2 கார் மீது மர்மநபர்கள் தாக்கினர். இதில் கருணாஸ் கார் கண்ணாடிகள் உடைந்தன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. விசாரணை நடத்திய போலீசார், கார் கண்ணாடியை உடைத்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவாடானை தொகுதி எம்எல்ஏவான கருணாஸ் தற்போது டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor and MLA Karunas's car was attacked in Nerkattum seval village near Nellai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X