நெற்கட்டும் செவல் வந்த கருணாஸ் கார் கண்ணாடி உடைப்பு - 3 பேர் கைது
நெற்கட்டும்செவலில் பூலித்தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த கருணாஸ் எம்எல்ஏவின் கார் கண்ணாடியை உடைத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெற்கட்டும் செவலில் பூலித்தேவர் பிறந்தநாளில் பங்கேற்க வந்த எம்.எல்.ஏ. கருணாசுக்கு சொந்தமான கார் கண்ணாடியை உடைத்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் நெற்கட்டும்செவலில் பூலித்தேவர் பிறந்தநாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பூலித்தேவனின் பிறந்தநாளையொட்டி நெற்கட்டும்செவல் சென்ற எம்.எல்.ஏ. கருணாஸ்க்கு சொந்தமான 2 கார் மீது மர்மநபர்கள் தாக்கினர். இதில் கருணாஸ் கார் கண்ணாடிகள் உடைந்தன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. விசாரணை நடத்திய போலீசார், கார் கண்ணாடியை உடைத்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவாடானை தொகுதி எம்எல்ஏவான கருணாஸ் தற்போது டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications