நெற்கட்டும் செவல் வந்த கருணாஸ் கார் கண்ணாடி உடைப்பு - 3 பேர் கைது

நெற்கட்டும்செவலில் பூலித்தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த கருணாஸ் எம்எல்ஏவின் கார் கண்ணாடியை உடைத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெற்கட்டும் செவலில் பூலித்தேவர் பிறந்தநாளில் பங்கேற்க வந்த எம்.எல்.ஏ. கருணாசுக்கு சொந்தமான கார் கண்ணாடியை உடைத்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் நெற்கட்டும்செவலில் பூலித்தேவர் பிறந்தநாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பூலித்தேவனின் பிறந்தநாளையொட்டி நெற்கட்டும்செவல் சென்ற எம்.எல்.ஏ. கருணாஸ்க்கு சொந்தமான 2 கார் மீது மர்மநபர்கள் தாக்கினர். இதில் கருணாஸ் கார் கண்ணாடிகள் உடைந்தன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. விசாரணை நடத்திய போலீசார், கார் கண்ணாடியை உடைத்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவாடானை தொகுதி எம்எல்ஏவான கருணாஸ் தற்போது டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+