என்னை கைது செய்ய சபாநாயகரிடம் அனுமதி பெற்றீரா?.. கருணாஸ் கேள்வி
Recommended Video

சென்னை: காவல் துறைக்கு கொலை மிரட்டல் விடுத்த கருணாஸ் திடீரென கைது செய்யப்பட்டார். அப்போது 307 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யும் அளவுக்கு நான் என்ன செய்து விட்டேன் என்று கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திநகர் போலீஸ் துணை ஆணையர் அரவிந்தனுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசினார். மேலும் வன்முறையை தூண்டும் அளவுக்கு அவரது பேச்சு இருந்தது.
இதைத் தொடர்ந்து தான் காவல் துறையை ஒருமையில் பேசியதற்கு வருத்தம் தெரிவித்து கொண்டார். மேலும் இனி இது போல் பேசமாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உருவாகியிருக்குமா
மேலும் முதல்வரே நான் அடித்துவிடுவேன் என பயந்து 100 போலீஸாரை அழைத்து வருகிறார் என்றும் கூவத்தூரில் நான் இல்லாமல் அரசாங்கம் உருவாகியிருக்குமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கைது செய்யலாம்
இதையடுத்து அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் அவர் எப்போதும் கைது செய்யப்படலாம் என்ற நிலை இருந்து வந்தது.

சட்டபடி எதிர்கொள்வேன்
தற்போது அவரது சாலி கிராமம் வீட்டில் வைத்து சென்னை நுங்கம்பாக்கம் போலீஸார் கைது செய்தனர். இதற்கு அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் என் மீது போடப்பட்டுள்ள வழக்கை சட்டப்படி சந்திப்பேன்.

சட்டத்தை மதிப்பவன்
307 பிரிவின் கீழ் வழக்கு பதியும் அளவுக்கு நான் என்ன செய்துவிட்டேன். பேச்சுரிமைக்கு எதிராக இந்த அரசு செயல்படுகிறது. எம்எல்ஏ என்ற அடிப்படையில் சட்டத்தை மதிப்பவன் நான் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications