காமெடியன் கருணாஸ் திடீர் புயலாக மாறியது ஏன்?
மாநில முதல்வரை கருணாஸ் மிரட்டுவது ஆச்சரியமாக உள்ளது.
Recommended Video

சென்னை: தமிழ்நாட்டு நிலைமை இவ்வளவு மோசமாகும் என்று கொஞ்சம்கூட நினைத்தே பார்த்திருக்க மாட்டோம்.
சில மாதங்களுக்கு முன்பு ஒரு காமெடி நடிகர் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசினார். இதோ இன்னொரு காமெடி நடிகர் முதல்வரையே கடுமையாக விமர்சித்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
ஒரு சாதாரண நடிகராக தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு திரையில் நுழைந்தவர் கருணாஸ். ஆரம்பத்தில் அமைதியாகத்தான் இருந்தார். ஆனால் தற்போது அவரது முகமே வேறாக மாறி விட்டது.

மெளனம்
முதல்வரையும், போலீஸ் அதிகாரியையும் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் முதல்வரை விமர்சித்திருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதாவைப் பார்த்து யாருமே இதுபோல கடுமையாக பேசியதாக வரலாறு இல்லை. அதை விட முக்கியமாக, எந்தக் கட்சியின் தேர்தல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றாரோ, அந்த கட்சியின் முதல்வரைப் பார்த்து கடுமையாக பேசியிருப்பதுதான் ஆச்சரியம்.

நிர்ப்பந்தம்
ஒரு சாதாரண எம்எல்ஏ, அதுவும் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் உள்ளவரை ஒரு முதலமைச்சரால் கண்டிக்க முடியவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் அவர் தமிழக மக்களுக்கான முதல்வர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். கருணாஸ் மீது உடனடி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சசிகலா
ஆரம்பத்திலிருந்தே சசிகலா ஆதரவாளர் கருணாஸ். சசிகலா சிறைக்குச் சென்ற பின்னர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு ஆதரவு கொடுத்தார். ஆனாலும் தனி அணியாக இவரும், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் மூவர் அணியாக செயல்பட்டு வருகின்றனர். இருப்பினும் உள்ளுக்குள் இவர் சசிகலா ஆதரவாகவே வலம் வருகிறார்.

தயக்கத்திற்குக் காரணம்
கருணாஸ் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காததற்கு இதுவே காரணமாக இருக்க முடியும் என்று தோன்றுகிறது. சசிகலா தரப்பு ஆதரவாளர்கள் ஏற்கனவே ஸ்லீப்பர் செல்லாக உள்ளதாக பேச்சு உள்ளது. எனவேதான் கருணாஸ் மீதான தயக்கத்திற்குக் காரணமாக பார்க்கப்படுகிறது.

பதிலடி தரவில்லை
அதேசமயம், கருணாஸ் பேச்சுக்கு அதிமுக தலைமை ஒரு கண்டிப்பு அறிக்கையாவது கொடுத்திருக்கலாம் என்று பேச்சு எழுந்துள்ளது. காரணம் முதல்வர் பதவிக்கென்று உள்ள மரியாதையை கருணாஸ் அவமதித்து விட்டதாக மக்கள் கருதுகிறார்கள்.
-
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications