கருணாஸின் டூ வீலர் ஆர்சி புக்கை ஒப்படைக்க எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை!
எம்எல்ஏ கருணாஸின் டூ வீலர் ஆர்சி புக்கை ஒப்படைக்குமாறு எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
சென்னை: எம்எல்ஏ கருணாஸின் டூ வீலர் ஆர்சி புக்கை ஒப்படைக்குமாறு எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் காவல்துறை அதிகாரிகள் குறித்து அவதூறு பேசியது தொடர்பாக எம்எல்ஏவும் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவருமான கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட கருணாஸை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியது போலீஸ். அதே நேரத்தில் ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் கருணாஸ்.

2 புதிய வழக்குகள்
இந்நிலையில் கருணாஸை காவலில் விசாரிக்க அனுமதி மறுத்த நீதிமன்றம் அவரது ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தது. இதனிடையே ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதாக தொடர்பாக 2 வழக்குகளில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் கைது செய்யப்பட்டார் கருணாஸ்.
[40 கைது.. 7 நாள் கலவரம்.. உ.பி மாநில பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கிய சிறுவர்களின் கிரிக்கெட் சண்டை! ]

7 நாள் ஜெயில்
இந்த வழக்கிலும் கருணாஸை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியது போலீஸ். அதில் கொலை முயற்சி வழக்கை ரத்து செய்த நீதிமன்றம் தடையை மீறி போராட்டம் நடத்திய வழக்கில் 7 நாள் நீதிமன்ற காவல் விதித்தது.

நிபந்தனை ஜாமீன்
இதைத்தொடர்ந்து இன்று காலை மீண்டும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கருணாஸுக்கு முதல்வர் குறித்து அவதூறு பேசிய வழக்கில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

2 பேர் உத்தரவாதம்
ஜாமீன் பெற்றுள்ள கருணாஸ் 50000 ரூபாய் முன்பணம் கட்ட வேண்டும் என்றும், இரண்டு பேர் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

டூ வீலர் ஆர்சி புக் நகல்
மேலும் கருணாஸ் தனது இருசக்கர வாகனத்தின் ஆர்சி புக் நகலை கொடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தினமும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் இவ்வழக்கை விசாரிக்கும் அதிகாரி முன் 30 நாள் தினமும் கையெழுத்து இட வேண்டும் என்றும் எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications