"ஜெ.வுக்கும்.. ஜெ.வுக்கும்" ரசிகர் மன்றம் தொடங்கும் நரிக்குறவர்கள்.. கரூரில் களேபரம்!!
கரூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலிதாவுக்கு ரசிகர் மன்றம் தொடங்கப் போவதாக கரூர் மாவட்ட நரிக்குறவர்கள் கூறியுள்ளனர். இந்த ரசிகர் மன்றம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயந்திக்கும் சேர்த்துத்தான் என்றும் கூறி அசத்தியுள்ளனர் இந்த நரிக்குறவர்கள்.

போகிற போக்கைப் பார்த்தால் தமிழகம் முழுவதும் உள்ள நரிக்குறவர்களைத் திரட்டி, ஜெயலலிதாவுக்காக காவடி தூக்கி, பால் குடம் ஏந்தி, கோவில் கோவிலாக உருண்டு, அமைச்சர்களுக்கு பெருத்த போட்டியாக மாறி விடுவார்கள் போல. அப்படி ஜெயலலிதா மீது பாசத்தைப் பொழிந்துள்ளனர் இந்த கரூர் நரிக்குறவர்கள்.
அப்படி என்னதான் நடந்தது....?

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், காதப்பாறை கிராமம், பஞ்சமாதேவி பகுதியில் உள்ள நரிக்குறவர் காலனியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் வேட்டைக்காரன் புதூர் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் நரிக்குறவர் நல வாரியம் மூலம் ரூ 7 ஆயிரத்து 500 க்கு காசோலை கொடுத்து 52 நபர்களை குஷிப்படுத்தியுள்ளார் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், காதப்பாறை கிராமம், பஞ்சமாதேவி பகுதியில் உள்ள நரிக்குறவர் காலனியில் வசிக்கும் டாக்டர் எம்.ஜி.ஆர் வேட்டைக்காரன் புதூர் பகுதியில் வசிக்கும் தா.சின்னதாயி (எ) கஜேந்திரன், உ.துரைகண்ணன், கொ.இளங்கோ, வடிவேல், துரைராஜ், ராதா, சுகுமார் உள்ளிட்ட 52 பேருக்கு நரிக்குறவர் நல வாரியம் மூலம் தலா ரூ 7 ஆயிரத்து 500 பேருக்கு நிதி உதவியை மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கொடுத்துள்ளார்.
காசோலையை பெற்றுக்கொண்ட நரிக்குறவர்கள் அம்மா ஜெ வாழ்க, அம்மா ஜெ வாழ்க என்று கோஷத்துடன் வெளி வந்தனர். மேலும் ஜெ வுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் நரிக்குறவர்கள் சங்க தலைவர் தா.சின்னதாயி (எ) கஜேந்திரன் தெரிவித்தார்.

சரி ஜெ. என்றால் எந்த ஜெ.. ஜெயலலிதாவா அல்லது கலெக்டர் ஜெயந்தியா என்று கொக்கியைப் போட்டபோது, சாமியோ! அம்மா ஜெயலலிதா ஆட்சியில் சொல்லியதை மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி நிறைவேற்றுகிறார்கள். ஆதலால் இருவருக்கும் நன்றி தானே ! எங்கள் ரசிகர் மன்றம் இருவருக்குமே என்று பதிலுக்கு கொக்கியைப் போட்டார் கஜேந்திரன்.
பலே பலே!
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications