அட, இல்லாத பஸ்ஸில் எப்படிப்பா பயணிப்பது.. கரூர் ரிப்போர்ட்டர்கள் கன்பியூஷன்!
கரூர்: கரூரில் செய்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட அரசுப் பேருந்துக்கான இலவச பேருந்து பயண அட்டையை பார்த்து செய்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிக்கை துறைக்கு மத்திய மற்றும் மாநில அரசு சலுகைகள் செய்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் பணிபுரியும் மாவட்ட நிருபர்கள், புகைப்படகலைஞர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
இதில் கரூரில் உள்ள சுமார் 40 க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்களுக்கு இலவச பயண அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அதை பார்த்த செய்தியாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி.
வேறொன்றும் இல்லை முன்பு பஸ் பாஸில் திருச்சி ரீஜியன் என்று எழுதப்பட்டிருந்ததால் டி.என்.45 பேருந்துகளில் மட்டுமே பயணிக்க வேண்டும் என அதிகாரிகள் மற்றும் செக்கர்களின் உத்திரவு. தற்போது புதிய பஸ் பாஸில் கரூர் ரீஜியன், டிஎன் 47 பேருந்துகளில் மட்டும் என்று எழுதப்பட்டிருக்கிறது.
டி.என்.47 பேருந்துகளில் மட்டும் தான் ஏற வேண்டுமா என செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரியிடம் கேட்டதற்கு கரூர் மண்டலம் என உருவாக்கி அதற்கென அதிகாரிகள் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்றார்.
இருப்பினும் அரசு பேருந்தில் டி.என் 47 என்று ஒரு பேருந்தும் இல்லை. தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த தொகுதியில் பணியாற்றும் செய்தியாளர்களுக்கே இந்நிலை என்றால் மற்ற மாவட்டங்களில் பணியாற்றும் நிருபர்களுக்கு என்ன கதி என்பது தான் தற்போது அனைத்து பத்திரிக்கையாளர்களின் கேள்வி.
ஏற்கனவே கும்பகோணத்தில் உள்ள 4 செக்டர்களில் திருச்சி ரீஜியனில் மட்டும் தான் பயணிக்க வேண்டிய அவல நிலை இருந்த நிலையில் தற்போது கரூர் ரீஜியனில் தான் பயணிக்க வேண்டும் என்றால் கரூர் ரீஜியனுக்கு வண்டி எங்கே இருக்கு.
அரசு போக்கு வரத்து துறை ஊழியர்கள் எந்த பேருந்தில் வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் பத்திரிக்கையாளர்கள் குறிப்பிட்ட பேருந்துகளில் தான் செல்ல வேண்டும் என்ற அவல நிலை போக்குவரத்து துறை அமைச்சர் ஊரிலும் என்றால் மற்றவர்களுக்கு என்ன?
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications