மோடி முகமூடி அணிந்து தூய்மை இந்தியா பிரசாரத்தில் ஈடுபட்ட 1300 மாணவ, மாணவியர்!
கரூர்: கரூரில், 2020-ம் ஆண்டுக்குள் தூய்மையான இந்தியாவை உருவாக்குவதை வலியுறுத்தி, லிட்டில் ஏஞ்சல்ஸ் ஆங்கில மேல்நிலைப் பள்ளியை சார்ந்த 1300 பள்ளி மாணவ-மாணவிகள் பிரதமர் மோடி உருவம் பதித்த முகமுடி அணிந்து சூளுரை ஏற்ற நிகழ்வு நடந்தது.
கடந்த அக்டோபர் 2 -ல் காந்திஜெயந்தி அன்று பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை தூய்மை ஆக்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். இத்திட்டத்திற்கு நாடெங்கும் பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் ஆதரவு அளித்து பல்வேறு இடங்களை தூய்மைப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கரூரில் உள்ள லிட்டில் ஏஞ்சல்ஸ் பள்ளியில் பயிலும் சுமார் 1300 மாணவ-மாணவிகள் பிரதமர் மோடி உருவம் பதித்த முகமுடி அணிந்து குழந்தைகள் தினத்தை கொண்டாடும் வகையில் பள்ளி வளாகத்தில் அணிவகுத்து ஒன்று கூடினர். அப்போது பிரதமர் மோடியின் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் பொது இடங்களில் குப்பைகளை போடமாட்டோம் என சத்திய பிரமாணம் செய்தனர்.
இது குறித்து பள்ளி ஆசிரியை ராஜேஸ்வரி கூறுகையில், தெருக்களிலும் சாலைகளிலும் குப்பைகளை கொட்டாமல் அதற்கென உரிய இடத்தில் குப்பைகளை கொட்டுவோம் என உறுதி மொழி ஏற்று பிரதமர் மோடியின் திட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர் குழந்தைகள் என்றார்.
இந்த நிகழ்ச்சியை, கரூர் லிட்டில் ஏஞ்சல்ஸ் ஆங்கில மேல்நிலை பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications