தியேட்டரில் வைத்து திருட்டு விசிடி தயாரித்த கும்பல்.. மேனேஜர், ஆப்பரேட்டர் கைது.. உரிமையாளர் ஓட்டம்!
கரூர்: கரூரில் உள்ள ஒரு தியேட்டரில் வைத்து திருட்டு விசிடி தயாரிக்கப்பட்டதை போலீஸார் கண்டுபிடித்து அந்தத் தியேட்டரின் மேலாளர், ஆப்பரேட்டரைக் கைது செய்துள்ளனர். தியேட்டர் உரிமையாளர் தப்பி ஓடி விட்டார்.
இருவரையும் கைது செய்த போலீஸார் ரூ. 30 லட்சம் மதிப்பிலான கருவிகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் புதிதாக வெளியிடப்படும் அனைத்துத் திரைப்படங்களும் மறுநாளே கள்ள மார்க்கட்டில் குறுந்தகடுகளாக விற்பனைக்கு வந்து விடுகின்றன. முதலில் தியேட்டர் பிரின்ட்டை வெளியிடுகிறார்கள். அடுத்த சில நாட்களில் தெள்ளத் தெளிவான காப்பி கைக்கு கிடைத்து விடுகிறது. இதனால் திரைப்படத் துறை பெரும் சவாலை சந்திக்கும் நிலை காணப்படுகிறது.

இது குறித்து வீடியோ தடுப்பு காவல் பிரிவினர் கண்துடைப்பிற்க்காக நடவடிக்கை மேற்கொள்வதால் இக்குற்ற செயலை தடுக்க முடியாமல் தயரிப்பாளர்கள் தவித்து வந்தனர். தொழிநுட்பம் வளர்ந்துள்ள சூழலில் படக்காட்சிகளை துல்லியமாக பார்க்கவும் கேட்கும் வகையில் கியூப் என்ற தொழில்நுட்ப முறையில் சமீபகாலங்களாக திரையிடப்பட்டு வருகிறது.
கரூரிலும் சில தியேட்டர்களில் கியூப் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதைப் பயன்படுத்தி துல்லியமான முறையில் தியேட்டரிலேயே திருட்டு விசிடி கும்பல் படத்தை காப்பி அடிக்க ஆரம்பித்துள்ளனர். கரூர் ரயில் நிலையம் அருகில் உள்ள பொன் அமுதா திரை அரங்கில் கடந்த 15.01.15 அன்று காலை சுமார் 11 மணியளவில் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் வெளிவந்த டார்லிங் திரைப்படத்தை திருட்டு தனமாக குறுந்தகடுகளாக தயாரித்துள்ளனர்.

இது தொடர்பாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் திருட்டு வீடியோ கண்கானிப்பாளர் சதீஸ்குமார் வீடியோ தடுப்பு காவல் பிரிவில் புகார் அளித்தார். இங்கு தயாரித்த குறுந்தகட்டை மும்பையில் உள்ள ஆய்வகத்தில் ஆய்வு செய்ததில் கரூர் பொன அமுதா திரை அரங்கில் பதிவு செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து இன்று திருட்டு வீடியோ தடுப்பு காவல் துறையினர் திரை அரங்கு மேலாளர் ரவிச்சந்திரனையும், ஆப்பரேட்டர் சுப்பிரமணியையும் கைது செய்து கரூர் குற்றவியல் எண் 1ல் ஆஜர் படுத்தி சிறையில் அடைந்தனர்.
இந்த குற்ற செயலுக்கு பயன்படுத்திய ரூ30 லட்சம் மதிப்பிலான கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பி ஓடிய திரையரங்கு உரிமையாளர் பொன்னுச்சாமியை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
திரையுலகமே திருட்டு வி.சி.டி யை ஒழிக்க போராடி வரும் நிலையில் திரையரங்கத்திலேயே திருட்டு வி.சி.டி தயாரித்த சம்பவம் திரையுலகினரை அதிர வைத்துள்ளது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications