சுட்டெரிக்க போகும் வெயில்.. தமிழகத்தில் இன்றிலிருந்து அக்னி நட்சத்திரம் தொடக்கம்
தமிழகத்தில் இன்றிலிருந்து அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் இன்றிலிருந்து அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுக்க இன்றிலிருந்து வெயில் மிகவும் அதிகமாக இருக்கும்.
கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது. இதனால் இயல்பாக இருப்பதைவிட வெயில் மிகவும் அதிகமாக இருக்கும். அக்னி நட்சத்திரம் என்பது சூரியனின் கதிர்கள் நேராக நம் மீது 90 டிகிரியில் விழுவதாகும். இதனால் மக்களுக்கு பாதிப்பு அதிக அளவில் ஏற்படும்.

தமிழகம் முழுக்க இன்றிலிருந்து வெயில் சுட்டெரிக்க வாய்ப்பு உள்ளது. இன்றிலிருந்து மே 28ம் தேதி வரை இந்த கத்திரி வெயில் இருக்கும். இந்த 24 நாட்கள் தமிழகம் முழுக்க வெயில் அதிகமாக இருக்கும்.
இதனால் மக்கள் வெளியே செல்ல வேண்டாம், வெளியே செல்பவர்களும் குடை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த வெயில் காரணமாக சரும பிரச்சனை, வெயில்கால நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்ற வருடத்தை விட இந்த வருடம் வெயில் அதிகமாக இருக்கும் என்று ஏற்கனவே வானிலை மையம் கூறியுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் சில இடங்களில் 110 டிகிரி செல்ஸியஸ் வரை வெயில் அடிக்கிறது.












Click it and Unblock the Notifications