சீரான உடல்நிலையில் கருணாநிதி.. மூன்றாவது நாளாக தொடரும் சிகிச்சை
திமுக தலைவர் கருணாநிதிக்கு 3வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Recommended Video
சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு 3வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது திமுக தலைவர் கருணாநிதிக்கு 3வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவேரி மருத்துவமனையில் 3வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தீவிர சிகிச்சைகளுக்கு பின் கருணாநிதியின் உடல்நிலை தற்போது இயல்புநிலையை அடைந்துள்ளது. நேற்று இரவு திமுக தலைவர் கருணாநிதிக்கு திடீர் என்று உடலில் பிரச்சனை ஏற்பட்டது. மீண்டும் அவரது இரத்த அழுத்தம் அதிகமானது.
அதன்பின் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு இரத்த அழுத்த பிரச்சனை மற்றும் சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு அவரது உடலில் பிரச்சனை ஏற்பட்டு பின் குணமானது. மருத்துவமனையில் தற்போது அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.
இந்த நிலையில் மருத்துவமனைக்கு முன் திமுக தொண்டர்கள் மீண்டும் கூடி வருகிறார்கள். மருத்துவமனையில் மீண்டும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு. அதேபோல் அரசியல் தலைவர்கள் வரிசையாக மீண்டும் மருத்துவமனைக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள்.