கருணாநிதி உடல்நிலை.. இது காவேரி மருத்துவமனையின் 6வது அறிக்கை
கருணாநிதி குறித்து 6-ஆவது அறிக்கையை காவேரி மருத்துவமனை 6-ஆவது அறிக்கையை வெளியிட்டது.
Recommended Video

சென்னை: கருணாநிதி குறித்து 6-ஆவது அறிக்கையை காவேரி மருத்துவமனை 6-ஆவது அறிக்கை வெளியிடப்பட்டது.
கருணாநிதிக்கு காய்ச்சல் காரணமாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 27-ஆம் தேதி நள்ளிரவு அவரது ரத்த அழுத்தம் குறைந்த அளவில் இருந்தது.

இதையடுத்து அவருக்கு 10 நாட்களாக சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக உறுப்புகளை செயல்பட வைப்பதில் சவாலாக உள்ளது. அடுத்த 24 மணி நேரத்துக்கு மருத்துவ உதவிகளுக்கு உடல்தரும் ஒத்துழைப்பை வைத்தே உடல்நிலை குறித்து கூட முடியும் என்று மருத்துவமனைக்கு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இன்று மருத்துவமனை 6-ஆவது முறையாக அறிக்கையை வெளியிட்டது. முதல்முறையாக ஜூலை 26-ஆம் தேதி அறிக்கையை மருத்துவமனை வெளியிட்டது.
அதில் கருணாநிதிக்கு இயல்பான முதுமையின் காரணமாக உடல்நலிவு ஏற்பட்டுள்ளது. சிறுநீரக தொற்றின் காரணமாக காய்ச்சல் உண்டாகி அதற்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஜூலை 28-ஆம் தேதி அறிக்கை வெளியானது. இதையடுத்து கடந்த ஜூலை 29-ஆம் தேதி நள்ளிரவு ஒரு அறிக்கை வெளியானது. இதில் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டாலும் நிலைமை பின்னர் சீரானது என்று வெளியானது.
அதுபோல் கடந்த ஜூலை 30-ஆம் தேதி கருணாநிதியின் உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டு சீர் செய்யப்பட்டது என்று இரவு 9.50 மணிக்கு அறிக்கை வெளியானது.
கடந்த ஜூலை 31-ஆம் தேதி அவரது அறிக்கையில் கல்லீரல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்ட போதிலும் அவரது உடல் சிகிச்சை முழுமையாக ஒத்துழைக்கிறது என்று அறிக்கை வெளியானது.
இதைத் தொடர்ந்து இன்றைய தினம் மீண்டும் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் அடுத்த 24 மணி நேரத்தில் அவருக்கு கொடுக்கப்படும் சிகிச்சைக்கு அவர் உடல்நிலை எப்படி ஒத்துழைக்கிறது என்பதை வைத்தே அடுத்தகட்ட சிகிச்சை இருக்கும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications