உயிரை காதலில் ஒளித்து வைத்துவிட்டேன் என பாடிய கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்! - வீடியோ
சென்னை: கவிதைகளின் அரசன் என்றழைக்கப்பட்ட 'கவிக்கோ' அப்துல் ரகுமான் பனையூரில் உள்ள அவரது வீட்டில் அதிகாலை 2 மணியளவில் காலமானார். புதுக்கவிதைகளின் முன்னோடிகளில் ஒருவரான அப்துல் ரகுமான் தன் 80 வயதில் காலமானார்.
வானம்பாடி இயக்க காலத்தில் உதித்த பல நட்சத்திர கவிஞர்களில் அப்துல் ரகுமானும் ஒருவர். கவிதை மரபுக் கவிதையோ, புதுக்கவிதையோ மக்களின் பிரச்சனைகளை அது பாட வேண்டும் என்கிற எழுச்சி தமிழ் இலக்கிய உலகில் 1970களில் பிறந்தது. அப்போது மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனைகள் குறித்து பாடிய கவிஞர்களுள் முக்கியமானவர் கவிக்கோ அப்துல் ரகுமான்.

கவிக்கோவின், 'பாடப் புத்தகங்களே குழந்தைகளை கிழித்து விடாதீர்கள்' என்ற கவிதை குழந்தைகள் மீது சுமத்தப்படும் கல்விச் சுமையை எடுத்துச் சொல்ல கவிஞர்கள் இன்றும் கையாளும் கவிதையாக இருக்கிறது.
தேர்தல் அரசியல் குறித்து எழுதிய கவிக்கோ, 'ஐந்தாண்டுக்கு ஒருமுறை/சுயம்வர மண்டபத்தில்/போலி நளன்களின் கூட்டம்/கையில் மாலையோடு/குருட்டு தமயந்தி' என்று எழுதுய கவிதை, தேர்தல் அரசியலில் மாற்றம் கொண்டு வரப்படாதவரை போற்றப்படும் கவிதையாக இருக்கும்.
'என் உயிரைக்/காதலில்/ஒளித்து வைத்துவிட்டேன்/மரணமே!/ இனி என்ன செய்வாய்?' என்று மரணத்தையே கேள்வி கேட்ட கவிஞரைத்தான் மரணம் தழுவிக்கொண்டுள்ளது. புதுக்கவிதை இருக்கும் காலம்தோறும், கவிக்கோ புதுக்கவிதைகளின் காலமாக வாழ்வார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications