எம்ஜிஆர், சிவாஜிக்கு முன்னரே ரூ.1லட்சம் ஊதியம் வாங்கிய திரைப் பேராளுமை 'கொடுமுடி கோகிலம்'- கேபிஎஸ்!
தமிழ்த் திரையுலகம் எத்தனையோ ஆளுமைகளை இன்றளவும் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.. இவர்களில் அதிகமாக கொண்டாடப்பட வேண்டிய பெண் ஆளுமை 'அவ்வையார்'தான்.. ஆம் இன்றைய தலைமுறைக்கும் 'அவ்வையார்' எனில் திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் அந்த அவ்வையார்தான் வாழும் சாட்சி.. அவர்தான் கே.பி.எஸ் எனப்படும் கே.பி. சுந்தராம்பாள் என்கிற தமிழ்ப் பெரும்பாட்டியார்.
திரை உலகின் ஆண் ஆளுமைகளான எம்ஜிஆர், சிவாஜிக்கு எல்லாம் ரொம்பவே சீனியர்தான் கேபி சுந்தராம்பாள். 1939-ம் ஆண்டு வெளியான நந்தனார் திரைப்படத்துக்கு அன்றே கேபி சுந்தராம்பாள் ரூ.1 லட்சம் சம்பளம் வாங்கினார். இன்றைய மதிப்பில் ரூ10 கோடி. எம்ஜிஆர், சிவாஜிக்கு முன்னரே இவ்வளவு பெரிய சம்பளம் பெற்ற முதல் பெண் ஆளுமை அம்மையார் கேபிஎஸ்தான்.

நந்தனார் படத்தில் 41 பாடல்கள்.. இதில் ஆண்வேடமிட்டு நந்தனாராக நடித்த கேபிஎஸ் பாடிய பாடல்கல் மொத்தம் 16 என்பது இன்றைக்கு நினைத்து பார்க்கவே மலைப்பாக இருக்கிறதே.
இத்தனைக்கும் கேபிஎஸ் அம்மையார் ஒன்றும் சபாக்களின் பரம்பரை வாரிசும் அல்ல.. பசி பட்டினியால் கோவில்களில் தஞ்சமடைந்து வறுமையில் வாடிய போது காதுகளில் விழுந்த கச்சேரி கீதங்கள் கேபிஎஸ்ஸை செழுமையான ஆளுமையாக செதுக்கியது. கேபிஎஸ் பாடாத கச்சேரிகளே இல்லை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும்.. இன்றைய நாள் வரை கேபிஎஸ்-ன் உச்சஸ்தாயி குரலை வென்றெடுக்க ஒரு ஆளுமையும் பிறந்தும் வந்துவிடவில்லை.
கேபிஎஸ் திருமண வாழ்க்கை அப்படி ஒன்றும் மகிழ்வானதாகவும் இல்லை;
புகழ்பெற்ற திரைநட்சத்திரமான கிட்டப்பாவை திருமணம் செய்து கொண்ட கேபிஎஸ்க்கு 6 ஆண்டுகள் மட்டுமே திருமண வாழ்வு அமைந்தது. ஆம் 25 வயதில் கணவரை இழந்தார். கணவரை இழந்த பின்னர் திரைப்படங்களில் ஆண்களுடன் இணைந்து நடிப்பதையே கைவிட்டார். தனித்துவமான ஆளுமையாக திரைப்பயணத்தைத் தொடர்ந்தார். இதன் உச்சம்தான் திருவிளையாடல் அவ்வையார்.
அவ்வையார் எப்படி இருப்பார்? திருவிளையாடல் படம்தான் நினைவுக்கு வரும்.. அவ்வையாராகவே வாழ்ந்து பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா என அன்று தன் சொந்த குரலில் பாடிய கேபிஎஸ்-ன் குரல் இன்று மட்டுமல்ல நூற்றாண்டுகளைக் கடந்தும் தமிழர் வாழும் நாடுகளில் எல்லாம் முருகப் பெருமான் திருத்தலங்களில் கணீரென ஒலித்துக் கொண்டுதான் இருக்கப் போகிறது.
கேபிஎஸ் அம்மையார் திரை ஆளுமை மட்டுமல்ல.. சுதந்திரப் போராட்ட வீரர்.. திரைப் பாடல்களை மட்டுமா பாடினார்? அன்றைய விடுதலைப் போரில் தேசபக்திப் பாடல்களையும் தமது கணீர் குரலில் பாடினார். இதனால் தேசப்பிதா மகாத்மா காந்திஜியின் பேரன்புக்குரியவரானார். அந்த நாளில் காந்தியோ பரம ஏழை சந்நியாசி என்ற கேபிஎஸ் பாடல், தேர்தல் களங்களில் காங்கிரஸ் கட்சிக்கு பெருவாரியான வாக்குகளை வாரிக் கொடுத்தது என்பதும் சரித்திரம்தான்.
அதேபோல "ஓட்டுடையாரெல்லாம் கேட்டிடுங்கள், இந்த நாட்டின் நலத்தை நாடிப் போட்டிடுங்கள்" என்ற கே.பி.சுந்தராம்பாளின் பிரசார பாடல், அன்றைய தலைமுறை வாக்காளர்களை அலை அலையாக காங்கிரஸ் பக்கம் இழுத்து வந்தது. கொடுமுடி கோகிலம், தமிழிசைச் செல்வி, ஏழிசை வல்லபி என்பது மக்கள் கேபிஎஸ்-க்கு அள்ளித் தந்த அன்பு பட்டங்கள். தமிழ்நாடு சட்ட மேலவையில் கேபிஎஸ் உறுப்பினராக (எம்.எல்.சியாக இருந்தார்). சுதந்திரப் போராட்ட வீரர் சத்தியமூர்த்தியின் பொருளாதார நிலையை கண்டு வருந்திய கேபிஎஸ் அம்மாள் சென்னை மாம்பலத்தில் நான்கரை கிரவுண்ட் நிலத்தை அப்படியே எழுதிக் கொடுத்தார்.. இன்றைக்கு அந்த நான்கரை கிரவுண்ட் நிலத்தின் மதிப்பு எத்தனை நூறுகள் கோடிகள் தெரியுமா?
தமிழினத்தின் ஆகச்சிறந்த பெண் ஆளுமையான கொடுமுடி கோகிலம் எனும் "அவ்வையார்" கேபி சுந்தராம்பாள் அம்மாளை வணங்கி பெருமிதம் கொள்வோம்!
-
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
இந்திய மக்களுக்கு நன்றி.. இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை தாக்கும் ஈரான் ஏவுகணையை கவனிச்சீங்களா? பின்னணி -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி












Click it and Unblock the Notifications