கே.சி.பழனிச்சாமியிடம் பணம்.. சகஜமப்பா.. சொல்கிறது திமுக
சென்னை: அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் கே.சி. பழனிச்சாமி ஒரு தொழிலதிபர். அவரிடம் பணம் புழங்குவது என்பது மிகவும் சாதாரணமான விஷயம் என்று திமுக கூறியுள்ளது.
அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் கே.சி. பழனிச்சாமி, அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி ஆகியோரின் இருப்பிடங்களில் நடந்த ரெய்டுகளில் கோடிக்கணக்கில் பணம் சிக்கியது. குறிப்பாக பழனிச்சாமியின் வீட்டிலிருந்து ரூ. 95 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில்தான் அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டது. இதுகுறித்து திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கருத்து தெரிவிக்கையில், அரவக்குறிச்சி தொகுதி தேர்தலை ஒத்திவைத்தது தேர்தல் ஆணையத்தின் முடிவு.
கே.சி. பழனிச்சாமி ஒரு தொழிலதிபர். அவரிடம் பணப்புழக்கம் இருப்பது சர்வசாதாரணம். பறிமுதல் செய்த பணம் தேர்தலுக்கு பயன்படுத்தப்படவில்லை என்றார் இளங்கோவன்.
தமிழகத்தில் தேர்தல் களத்தில் உள்ள வேட்பாளர்களிலேயே மிகப் பெரிய மெகா கோடீஸ்வரர்களில் கே.சி. பழனிச்சாமியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications