காலங்காத்தாலயே குஷ்புகிட்ட வாங்கிக்கட்டுவதற்கே வராங்கப்பா
சென்னை: காலையிலேயே ஒருவர் ட்விட்டரில் நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்புவை கடுப்பேற்றியுள்ளார்.
வரலாறு காணாத கனமழையால் சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரபலங்கள் பலர் உதவி செய்தனர், செய்து வருகின்றனர். நடிகர் சித்தார்த், ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் சென்னை மற்றும் கடலூர் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் அளித்து வருகிறார்கள்.

மேலும் சென்னை, கடலூரில் புனர்வாழ்வுப் பணிகளை மேற்கொள்ளவும் முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். சென்னையில் மழை பெய்தபோது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு நேரில் சென்று உணவும், தண்ணீர் பாக்கெட்டுகளும் வழங்கினார்.
மேலும் தனது 13 வயது மகளுடன் சேர்ந்து அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். அவர் இவ்வளவும் செய்திருக்கையில் விஜேஷ் கே சந்திரன் என்பவர் அவரிடம் ட்விட்டரில் கேட்டிருப்பதாவது, சில சினிமா பிரபலங்கள் அரசிடம் நிதி அளித்துள்ளனர். நீங்கள் எப்படி.. சினிமா பிரபலம் என்ற முறையில் அளித்தீர்களா என்று கேட்டுள்ளார்.
அதற்கு குஷ்பு கூறியிருப்பதாவது,
Wake up to reality..look around and learn what many like me have done b4 commenting..can someone pls enlighten him? https://t.co/WvmDq17LXF
— khushbusundar (@khushsundar) December 10, 2015 விழித்து நிஜத்தை பாருங்கள்...கமெண்ட் செய்வதற்கு முன்ப என் போன்று பலர் என்ன செய்துள்ளனர் என்று தெரிந்து கொள்ளுங்கள்.. யாராவது அவருக்கு எடுத்துச் சொல்லுங்களேன்? என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications