நோட்டா: நடிகர் பார்த்திபன் அப்படி சொன்னால் குஷ்பு இப்படி சொல்கிறாரே!
சென்னை: நோட்டாவுக்கு நோ சொல்லுங்கள் என்று நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் காலையிலேயே வாக்களித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு சென்னை மந்தவெளியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களித்தார்.
வாக்களித்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
Proud to be an INDIAN..me n hubby have done our duty by exercising our vote..have you?? #VOTE100 #NO2NOTA pic.twitter.com/oHllti4grf
— khushbusundar (@khushsundar) May 16, 2016
அதிமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் தான் ஆளுங்கட்சியினர் பணப் பட்டுவாடா செய்துள்ளனர். தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ள பணத்தில் 99 சதவீதம் ரொக்கம் அதிகமுகவினருடையது. அதிமுக அரசுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டனர் என்றார்.
வாக்களித்த பிறகு குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
இந்தியராக இருப்பதில் பெருமையாக உள்ளது. நானும், என் கணவரும் கடமையை உணர்ந்து வாக்களித்துள்ளோம். நீங்கள்? #VOTE100 #NO2NOTA என்று தெரிவித்துள்ளார்.
குஷ்பு தான் ட்விட்டரில் வெளியிடும் கருத்துகளோடு நோட்டாவுக்கு நோ சொல்லுங்கள் என்று கூறி வருகிறார்.












Click it and Unblock the Notifications