புதுச்சேரி ஆளுநராக "அதிரடி" கிரண் பேடி நியமனம்..!
புதுவை: புதுவையின் புதிய துணை நிலை ஆளுநராக நாட்டின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெருமைக்குரிய கிரண்பேடி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் கிரண்பேடி. காந்தியவாதி அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் இணைந்து போராடிய இவர், பின்னர் பாஜகவில் இணைந்தார்.

அதனைத் தொடர்ந்து டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பாஜகவின் முதல்வர் வேட்பாளராக கிரண்பேடி களமிறக்கப்பட்டார். கெஜ்ரிவால், கிரண்பேடி இருவருமே அன்னா ஹசாரேவின் இயக்கத்தில் ஒன்றாக பணிபுரிந்தவர்கள். ஆனால், அத்தேர்தலில் பாஜகவை வீழ்த்தி ஆம் ஆத்மி டெல்லியில் ஆட்சி அமைத்தது.
இந்நிலையில், தற்போது புதுவையில் துணை நிலை ஆளுநராக கிரண்பேடியை நியமிப்பதாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார். கடந்தவாரம் தான் அங்கு சட்டசபைத் தேர்தல் முடிந்து புதிய ஆட்சி அமைய உள்ள நிலையில், அங்கு புதிய ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்தமான் நிக்கோபார் துணைநிலை ஆளுநர், ஏ.கே.சிங் கூடுதல் பொறுப்பாக புதுச்சேரியையும் இதுவரை கவனித்து வந்தார்.
நேர்மைக்கு பேர் போன கிரண்பேடி டெல்லி போலீஸ் கமிஷனராக செயல்பட்டவர். இவரது காலத்தில்தான் டெல்லி திகார் சிறை சீரமைக்கப்பட்டது. திகார் சிறையில் நடந்த நல்ல மாற்றங்களை பாராட்டி அவருக்கு ராமன் மகசேசே விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications