கூடங்குளம் அணுமின் நிலைய மின் உற்பத்தி 570 மெகாவாட்டாக அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
கூடங்குளம்: கூடங்குளம் முதலாவது அணுஉலையில் மின்உற்பத்தி 570 மெகாவாட்டை எட்டியுள்ளதாக அணு மின் நிலைய இயக்குனர் சுந்தர் தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் அணு உலைவளாகத்தில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு கொடியேற்றி வைத்து விட்டு கூடங்குளம் அணுஉலையின் வளாக இயக்குநர் சுந்தர் நிருபர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், இந்திய அணுஉலைகளில் கூடங்குளத்தில் தான் முதன் முறையாக அதிக மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது . கூடங்குளம் முதலாவது அணு உலையில் இதுவரை 50 கோடி யூனிட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 2வது அணுஉலையில் அதிக காற்றழுத்த சோதனை நடைபெற்று வருவதாகவும், இன்று மட்டும் முதலாவது அணு உலையில் 570 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் சுந்தர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications