விவசாய நிலத்தில் எரிவாயு குழாய்களை பதிக்க கொங்குநாடு மக்கள் கட்சி எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

KMK opposes laying pipeline along farm lands
சென்னை: விவசாய நிலத்தில் எரிவாயு குழாய்களை பதிக்க விடமாட்டோம். மாற்றுப் பாதையில் குழாய் பதிப்பதை பற்றி யோசிக்க வேண்டும். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

எரிவாயு குழாய்களை மாற்றுப் பாதையில் எடுத்து செல்ல வேண்டும் என்று மாநில அரசும், விவசாயிகளும் தொடர்ந்து வலியுறுத்திய பிறகும் மத்திய அரசின் கெயில் நிறுவனம் விவசாய நிலத்தில் குழாய்களை பதிக்க அடம் பிடித்து வருவது கண்டிக்கத்தக்கது. தமிழக அரசுக்கும், மக்களுக்கும் அநீதி இழைப்பது மத்திய அரசின் நோக்கமாக இருப்பது வருத்தமளிக்கிறது.

உலகத் தமிழர்களின் உணர்வுகளையும், தமிழக சட்டமன்றத்தின் தீர்மானத்தையும் அவமதித்து விட்டு காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டதற்கும், இதற்கும் வித்தியாசம் இல்லை. காமன் வெல்த் மாநாடு இலங்கையில் நடந்ததால் தடுக்க முடியவில்லை.

விவசாய நிலத்தில் எரிவாயு குழாய்களை பதிக்க விடமாட்டோம். மாற்றுப் பாதையில் குழாய் பதிப்பதை பற்றி யோசிக்க வேண்டும். இந்த பிரச்சினையில் தமிழக மத்திய மந்திரிகள் வாய்மூடி மவுனமாக இருக்க கூடாது. உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவும் முடிவு செய்துள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+