கோடை வெயிலை தணிக்க “கொடை” யில் குவிந்த மக்கள்...
கொடைக்கானல்: கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் குளுகுளு பிரதேசமான கொடைக்கானலில் கூட்டம் அதிகரித்து வருகிறது.
கடந்த 2 நாட்களாகவே சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வர ஆரம்பித்துள்ளனர்.
தற்போது தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விட ஆரம்பித்துள்ளதால் கூட்டம் அதிகரித்து வருகிறதாம். இதனால் முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

”குளிரும்” கொடைக்கானல்:
கொடைக்கானலில் நேற்று மாலை 4 மணிக்கு மேல் குளிர்ந்த காற்று வீசியது. மாலை 6 மணி அளவில் சிறிது நேரம் கோடை மழை பெய்தது. அதிகாலை 4 மணி வரை நல்ல குளிர்ச்சியான சூழல் நிலவியது.

குறைந்த வெய்யில்:
பகலில் அதிகபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியசாகவும், இரவில் குறைந்தபட்ச வெப்பநிலை 11 டிகிரி செல்சியசாகவும் இருந்தது.

ஜில்லுனு இருக்கு வெய்யிலுக்கு:
காற்றின் வேகம் 3 கி.மீ. ஆகவும் காற்றில் நிலவிய ஈரப்பதம் 6 சதவீதமாகவும் இருந்தது. இதனால் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.

குவிந்த பயணிகள்:
கொடைக்கானல் ஏரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். கோக்கர்ஸ் வாக், பசுமைப் பள்ளத்தாக்கு, துாண்பாறை, பைன் வனப்பகுதி, குணா குகை என எல்லா சுற்றுலாத் தலங்களிலும் சுற்றுலா பயணிகள் நேற்று அதிகளவில் காணப்பட்டனர்.

போக்குவரத்து நெரிசல்:
துாண்பாறை, மூஞ்சிக்கல் பகுதிகளில் இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications