கொடுங்கையூர் பேக்கரி தீவிபத்து சம்பவம்... பலி எண்ணிக்கை 3-ஆக உயர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கொடுங்கையூரில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் இருவர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.

கொடுங்கையூர் தீ விபத்தில் ஏற்கனவே ஏகராஜன் என்ற தீயணைப்பு வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் 82 சதவீதம் தீக்காயங்களுடன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிக்சை பிரிவில் இருந்த பரமானந்தம் என்பவர் நேற்று இரவு உயிரிழந்தார். இவர் கொடுங்கையூர் அப்பர் தெருவை சேர்ந்தவர், சம்பவத்தன்று வேடிக்கை பார்க்க சென்றபோது விபத்தில் சிக்கினார்.

Kodungaiyur incident: Death toll rises to 3

அவரை தொடர்ந்து அதிகாலை அபிமன்யு என்பவரும் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. சென்னை கொடுங்கையூரில் உள்ள முருகன் என்ற சிப்ஸ் கடையில் கடந்த சனிக்கிழமை இரவு சிலிண்டர் ஒன்று திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 7 போலீஸார் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தீயணைப்பு வீரர்கள் சிலரும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+