ஆங்கிலேய சர்வாதிகார ஆட்சியை நினைவுபடுத்துகிறது.. நெல்லை தடியடி பற்றி கொளத்தூர் மணி!
சென்னை: தமிழக மக்களின் உரிமைக்காக தமிழகத்தின் தண்ணீர்த் தேவையை கருத்தில் கொண்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் அமைதியாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காவேரி உட்பட பலர் காவல்துறையின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது, காவல்துறையின் அலட்சியப்போக்கை வெளிப்படுத்துகிறது. அறவழியில் போராடும் மக்களின் மீது இது போன்று நடத்தப்படும் தாக்குதல்கள் ஆங்கிலேய சர்வாதிகார ஆட்சியையே நினைவுபடுத்துகிறது என்று கொளத்தூர் மணி கூறியுள்ளார்.

திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி வெளியிட்டுள்ள அறிக்கை:
தாமிரபரணி ஆற்றின் நீரை உறிஞ்சி விற்பனை செய்யும் பன்னாட்டு குளிர்பான ஆலையை மூடக்கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நடத்தப்பட்ட காவல்துறையினரின் தாக்குதலில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் உட்பட பலர் கொடுங்காயம் அடைந்துள்ளனர்.
காவல்துறையின் இந்த ஜனநாயக விரோதப் போக்கை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
பொதுவாக பொதுமக்கள் குடிநீர் பிரச்சனைக்காகவோ, போக்குவரத்து வசதிகளுக்காகவோ, சுகாதாரச் சீர்கேடுகளுக்காவோ, குடிமைப் பொருட்களுக்காகவோ போராட்டம் நடத்தினால் அதற்குரிய அதிகாரிகள் வந்து பேசி சமரசம் செய்வார்கள். ஆனால் கடந்த 10-15 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் எந்தவிதமான போராட்டங்களாக இருந்தாலும் காவல்துறை மட்டுமே வந்து மக்களிடம் பேசுவதும் போராட்டக்காரர்கள் மீது வன்முறையினை நிகழ்த்துவதும் தொடர்கதையாகி வருகிறது இதை தமிழகத்தை ஆளும்கட்சிகள் கண்டும் காணாமல் இருப்பதால் காவல்துறையின் அத்துமீறல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தமிழக மக்களின் உரிமைக்காக தமிழகத்தின் தண்ணீர்த் தேவையை கருத்தில் கொண்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் அமைதியாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காவேரி உட்பட பலர் காவல்துறையின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது, காவல்துறையின் அலட்சியப்போக்கை வெளிப்படுத்துகிறது. அறவழியில் போராடும் மக்களின் மீது இது போன்று நடத்தப்படும் தாக்குதல்கள் ஆங்கிலேய சர்வாதிகார ஆட்சியையே நினைவுபடுத்துகிறது.
இந்த அத்துமீறலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது தமிழக காவல்துறை உரிய நடவடிக்கை எடுப்பதோடு இந்தத் தவறுகள் இனி நடக்காமல் இருக்க தமிழக காவல்துறையும் தமிழக அரசும் முன்வர வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications