மீண்டும் தனித் தமிழ்நாடு கோருவதற்கான சூழ்நிலை இப்போதுதான் உருவாகியுள்ளது- கொளத்தூர் மணி எச்சரிக்கை
தமிழர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதால் தனித் தமிழ்நாடு கோரிக்கையை மீண்டும் முன்வைக்கும் சூழல் உருவாகியுள்ளது என்று திவிக தலைவர் கொளத்தூர் தா.செ. மணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: தமிழர்களுக்கான உரிமை மறுக்கப்படும் இப்போதுதான் தனித் தமிழ்நாடு கோரிக்கையை மீண்டும் முன்வைப்பதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது என்று திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1956-ம் ஆண்டு வரை சென்னை மாகாணமாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஒடிஷாவின் பகுதிகள் இணைந்து இருந்தன. ஆனால் மொழிவழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததால் 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி சென்னை மாகாணம் தனித்தனி மாநிலங்களாக பிரிக்கப்பட்டன.

பிரிந்ததும் இணைந்ததும்...
அப்போது தமிழகத்தின் திருப்பதி, திருத்தணி, உள்ளிட்ட பல பகுதிகள் ஆந்திராவோடு சேர்க்கப்பட்டன. கன்னியாகுமரி, இடுக்கி, தேவிகுளம், பீர்மேடு கேரளாவுடன் இணைக்கப்பட்டது. கொள்ளேகால், காவிரி பிறக்கும் குடகு, கோலார் தங்கவயல் உள்ளிட்டவை கர்நாடகாவோடு இணைந்தன.

உயிர்த்தியாகங்கள்..
திருத்தணியும் கன்னியாகுமரியும் உயிர்த் தியாகங்களுக்குப் பின்னர் தாய்த் தமிழகத்தோடு இணைந்தன. இன்னமும் தமிழகத்தில் எல்லை மீட்புப் போராட்டங்கள் தொடர்கின்றன. சென்னை மாகாணம் மொழிவழி மாநிலங்களாக பிரிக்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.
தனித்தமிழ்நாடு கோரிக்கை இல்லை
இதையொட்டி நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் 'காலத்தின் குரல்' நிகழ்ச்சியில் சிறப்பு விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பாஜகவின் கே.டி. ராகவன், மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டாலும் நிர்வாக வசதிக்காக மாநிலங்கள் தொடர்ந்து பிரிக்கப்பட்டு வருகின்றன. மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால் இன்று தனித் தமிழ்நாடு போன்ற பேச்சுகள் போய் இந்தியா என்ற பரந்துபட்ட பார்வை மக்களிடத்தில் இருக்கிறது என்று கூறினார்.

இப்போதுதான் உருவாகிறதூ..
இதைமறுத்த கொளத்தூர் மணி, கேடி ராகவன் தனித்தமிழ்நாடு கோரிக்கை எல்லாம் போய்விட்டது என்று கூறினார். ஆனால் இப்போதுதான் அது உருவாகிக் கொண்டு வருகிறது. இப்போது உரிமை மறுக்கப்படுகிறபோது, என்னுடைய மாநிலத்தின் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக என்னுடைய மொழி இல்லை என்கிறபோது அல்லது என்னுடைய மொழியை என்னுடைய மாநிலத்தில் பயிற்று மொழியாக கொண்டுவருவதற்கு தடைகள் வருகிற போது அதற்கு எங்கோ இருக்கிற உச்சநீதிமன்றம் தீர்ப்புகளை வழங்குகிறபோது 'அதைப் பற்றி' (தனித்தமிழ்நாடு) மீண்டும் சிந்திக்கிற சூழல் இப்போதுதான் உருவாகியுள்ளது என்றார்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications