நீதிபதி கர்ணன் மாயம்.. ஏமாற்றத்துடன் சென்னை திரும்பிய கொல்கத்தா போலீஸ்

நீதிபதி கர்ணனை கைது செய்ய தடா சென்ற கொல்த்தா போலீசார் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பினர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீதிபதி கர்ணன் இருக்கும் இடம் தெரியாமல் தடாவில் திணறி வந்த கொல்கத்தா போலீசார் மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்துள்ளனர்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கியது உச்சநீதிமன்றம். இதனையடுத்து சென்னையில் இருந்த கர்ணனை கைது செய்ய கொல்கத்தா போலீசார் இன்று இங்கு வந்தனர். தமிழக போலீசாருடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

Kolkatta police again return to Chennai

இதையடுத்து நீதிபதி கர்ணன் நள்ளிரவே காளஹஸ்தி சென்று விட்டதாக தகவல் வெளியானதால் அவரைத்தேடி கொல்கத்தா போலீசார் ஆந்திர மாநிலம் காளஹஸ்த்தி புறப்பட்டுச் சென்றனர். நீதிபதி கர்ணனின் கார் ஓட்டுனர் செல்போன் சிக்னலை வைத்து போலீசார் அங்கு தேடுதல் வேட்டை நடத்தினர்.

தடாவில் உள்ள காவல் நிலையத்திலும் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். செல்போன் சிக்னலை வைத்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். இருப்பினும் நீதிபதி கர்ணன் இருக்கும் இடத்தை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து நீதிபதி கர்ணன் அப்பகுதியில் இல்லை என கூறியதை அடுத்து கொல்கத்தா போலீசார் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பினர்

இதனிடையே சென்னை சூளைமேட்டில் உள்ள கர்ணனின் மகன் வீட்டிலும் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+