மக்களின் மன ஓட்டத்தை பிரதிபலிக்கிறது கோவனின் பாடல்: ஜி.கே.நாகராஜ்
சென்னை: மக்கள் கலை இலக்கிய கழக பாடகர் கோவனின் பாடல் மக்களின் மன ஓட்டத்தையே பிரதிபலிக்கிறது எனகொங்குநாடு ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் ஜி.கே.நாகராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

பாடலாசிரியர் கோவன் தமிழக அரசுக்கு எதிராகவும், மதுவின் தீமைகளையும் வலியுறுத்தி பாடல் மூலமாகவும், சாலையோர நடனங்கள் மூலமாகவும் மக்களிடம் கொண்டு சென்றுள்ள கருத்துக்கள், விமர்சனங்கள் முதல்வரின் மீதான தனிப்பட்ட விமர்சனத்தை தவிர்த்து, பாடலின் ஒவ்வொரு வரியும், வாக்கியமும் மதுவால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ண ஓட்டத்தையே பிரதிபலிக்கிறது.
தமிழக முதல்வர் மீதான தனிப்பட்ட விமர்சனங்களை அவர் பாடல்களில் நீக்கிவிட்டால், அவருடைய பாடல் வரிகள் தமிழகத்தின் தற்கால நிலையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. மதுவால் ஏற்படும் தீமைகளை தாங்கிக்கொள்ள முடியாத உச்சகட்ட விரக்தி நிலைக்குச் சென்ற ஜனநாயகத்தின் மீதும்,தமிழக மக்களின் மீதும் அக்கறையுள்ள ஒவ்வொரு மனிதனின் உள்ளக்குமறலே இந்தப்பாடல்.
மீண்டும் மீண்டும் ஏதாவதொரு காரணத்தைச் சொல்லி,மது விற்பதை நியாயப்படுத்துவதை விட்டு தமிழக மக்களின் உண்மையான மனக்குமறலை உணர்ந்து,தமிழக அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதை தீவிரமாக பரிசீலிக்க வேண்டிய தருணம் இது''என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications