மதுரை வக்கீல்கள் அலுவலகத்தை அகற்ற எதிர்ப்பு - கோவையில் 3000 வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

Subscribe to Oneindia Tamil

கோவை: மதுரையில் வக்கீல்கள் அலுவலகத்தை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் இன்று 3 ஆயிரம் வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு செய்தனர்.

மதுரை நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் அலுவலகத்தை அந்த இடத்தில் இருந்து அகற்ற சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை ரத்து செய்ய வலியுறுத்தியும், அகில இந்திய பார் கவுன்சிலர் அசோசியேசன் மதுரையை சேர்ந்த 15 வழக்கறிஞர்கள் மீது இடைக்கால தடை விதித்ததை கண்டித்தும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கீழமை நீதிமன்ற கூட்டமைப்பு சார்பில் இன்று ஒரு நாள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் வக்கீல்கள் ஈடுபட்டு உள்ளனர்.

கோவை பார்கவுன்சிலை சேர்ந்த 3 ஆயிரம் வழக்கறிஞர்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டது.

இதே போல் கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், ஆகிய இடங்களில் உள்ள கோர்ட்டுகளிலும் வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+