”எதுவுமே செய்யாதவங்ககிட்ட எதுக்கு விசாரணை?” – கைதிகளை அழைத்துச் சென்ற பஸ் சிறை பிடிப்பு!
கோவில்பட்டி: கோவில்பட்டியில் விசாரணை கைதிகளை அழைத்துச் சென்ற பேருந்தை உறவினர்கள் சிறைபிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் விசாரணை கைதிகளை அழைத்துச் சென்ற பேருந்தை நடுவழியில் உறவினர்கள் மறித்து மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கோவில்பட்டியை அடுத்த கரிசல்குளத்தைச் சேர்ந்தவர்கள் ரவிசங்கர், தங்கராஜ். பேருந்தின் மீது கல்வீசியது தொடர்பாக இவர்கள் இருவரையும் போலீசார் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக பேருந்தில் அழைத்துச் சென்றனர்.
பேருந்து சென்றுகொண்டிருந்தபோது வழிமறித்த உறவினர்கள் அவர்கள் மீது பொய் வழக்கு போடுவதாக குற்றம் சாட்டினர். பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் ரவிசங்கர், தங்கராஜ் இருவரும் போலீஸ் ஜீப்பில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications