மிக்சி, கிரைண்டர் வழங்க கோரி போராட்டத்தில் குதித்த பெண்கள்!
கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகளை வழங்கக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
கோவில்பட்டி அருகே தமிழக அரசின் இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகளை வார்டு வாரியாக வழங்கவும், குடிநீர், வாறுகால் வசதிகளை முறையாக செயல்படுத்த கோரி பெண்கள் உட்பட ஏராளமான மக்கள் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கு தமிழக அரசின் இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள் விரைவில் வழங்கப்பட உள்ளது.
இதனால் இந்த இலவச மின்சாதனங்களை முதல் வார்டில் இருந்து ஒவ்வொரு வார்டு வாரியாக முறையாக வழங்கவும், குடிநீர், வாறுகால், சாலை வசதிகளை முறையாக செயல்படுத்தவும், தெருக்களில் சுற்றி திரியும் பன்றிகளால் சுகாதாரகேடு ஏற்பட்டு வருவதால் பன்றிகளை கட்டுப்படுத்தவும், தெருக்களில் இடையூறாக வளர்ந்துள்ள வேலிமரங்களை அகற்றவும் வலியுறுத்தி 1வது வார்டு உறுப்பினர் முருகபூபதி தலைமையில் பெண்கள் உட்பட ஏராளமான மக்கள் கோவில்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.












Click it and Unblock the Notifications