தீரத்துடன் போராடிய வீரப் பெண் கவுசல்யா
Subscribe to Oneindia Tamil
சென்னை: 2017ம் ஆண்டின் இறுதியில் மறக்க முடியாத நினைவலைகளை ஏற்படுத்தி விட்டார் கவுசல்யா.
2015ம் ஆண்டு தன்னுடன் பயின்ற தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞர் சங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்ட பெண் கவுசல்யா. 8 மாதங்கள் சங்கருடன் வாழ்ந்த அவருக்கு பெற்றோர் கொடுத்த சீதனம் கூலிப்படையை ஏவி சங்கரையும், கவுசல்யாவையும் கொல்ல சதி செய்தது தான். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் நடுரோட்டில் வைத்து சங்கர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டார்.

இதில் கவுசல்யாவும் படுகாயங்கள் அடைந்தார், எனினும் சோர்ந்து விடாமல் தைரியத்தோடு பெற்றோருக்கு எதிராக திருப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பெற்றோராக இருந்தாலும் கொலையாளிகள் தான் என்பதை நீதிமன்றம் மூலம் நிரூபித்துக் காட்டியவர் கவுசல்யா.












Click it and Unblock the Notifications