தினகரனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம்... ஊடகங்களுக்கு கேபி முனுசாமி வேண்டுகோள்
டிடிவி தினகரனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம் என முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: டிடிவி தினகரனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம் என முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் ஓபிஎஸ் அணியை சேர்ந்தவரும் முன்னாள் அமைச்சருமான கேபி முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது டிடிவி தினகரன் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த கே.பி முனுசாமி முக்கியத்துவம் இல்லாத தினகரனுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் அளிக்கவேண்டாம் என கேட்டுக்கோண்டார். மேலும் சசிகலாவுக்கு ஆதரவாக அமைச்சர் ஓஎஸ் மணியன், எம்பி தம்பிதுரை ஆகியோர் பேசுவது அவர்களது தனிப்பட்ட கருத்து என்றும் அவர் கூறினார்.
மேலும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு பள்ளி மாணவர்களை அழைத்து செல்ல சென்னை ஹைகோர்ட் தடைவிதித்திருப்பதற்கும் அவர் வரவேற்பு தெரிவித்தார். இரட்டை இலைச்சின்னம் மற்றும் கட்சித் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும் என்றும் கேபி முனுசாமி கூறினார்.