கூடங்குளம் 2வது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கியது
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் கூடங்குளம் 2வது அணு உலையில் மின் உற்பத்தி முதன் முறையாக இன்று தொடங்கியுள்ளது.
கூடங்குளத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 2013ம் ஆண்டு அக்டோபார் 22ம் தேதி முதல் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கியது. அதன் பிறகு படிப்படியாக உயர்ந்த மின் உற்பத்தி 1000 மெகாவாட்டை அடைய 8 மாதங்கள் பிடித்தது.

இதனைத் தொடர்ந்து 2வது அணு உலைகளுக்கான பணிகள் தொடங்கப்பட்டன. பின்னர், 2வது அணு உலையில் தொடர்ந்து சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு எரிபொருள் நிரப்பும் பணிகளும் நடந்தேறின. இந்நிலையில், கடந்த மே 18ம் தேதி கூடங்குளம் 2வது அணு உலையில் யுரேனியம் நிரம்பும் பணியும் முடிவடைந்தது.
இதனைத் தொடர்ந்து ஜுலை 10ம் தேதி அணுப்பிளவு தொடர்வினை தொடங்கியது. சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக நடந்ததையடுத்து மின்உற்பத்தியை தொடங்குவதற்கு மத்திய அணு சக்தி ஒழுங்காற்று வாரியத்துக்கு கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் அனுமதி அளித்தது. இதனையடுத்து இன்று 2வது அணு உலையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
கூடங்குளம் 2வது அணு உலையில் இன்னும் 10 நாட்களில் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று கடந்த 15ம் தேதி அணுமின் நிலைய வளாக இயக்குநர் சுந்தர் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று காலை 11.17 மணிக்கு கூடங்குளம் 2வது அணு உலையில் முதன் முறையாக மின் உற்பத்தி தொடங்கியது.
தற்போது 240 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு தென்னக மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளது. இன்னும் 3 மாதங்களில் 1000 மெகா வாட் மின் உற்பத்தி நடைபெறும் என்றும் அதன் பிறகு வர்த்தக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கும் என்றும் அணுமின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications