துப்பட்டாவால் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றாரா அபிராமி.. திடுக் தகவல்
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குன்றத்தூர் அபிராமி சிறைக்குள் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video

சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குன்றத்தூர் அபிராமி சிறைக்குள் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையை அடுத்த குன்றத்தூரை சேர்ந்த அபிராமிக்கு அதே பகுதியை சேர்ந்த பிரியாணி கடை ஊழியருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் பிரியாணி டெலிவரி செய்ய வரும் சாக்கில் அபிராமியுடன் உல்லாசம் அனுபவித்து வந்தார் சுந்தரம்.
சுந்தரத்துடனான கள்ளக்காதல் விவகாரம் அபிராமியின் குடும்பத்தினருக்கு தெரியவரவே அவரை கண்டித்துள்ளனர். சுந்தரத்துடன் பழகவும் தடைவித்துத்துள்ளனர்.

கள்ளக்காதலன் ஆலோசனை
இதனால் ஆத்திரமடைந்த அபிராமி சுந்தரத்திடம் கூறி அழுது புலம்பினார். இதனைக்கேட்டு வருத்தப்பட்ட சுந்தரம் குழந்தைகள் மற்றும் கணவரை கொன்று விட்டால் எங்காவது போய் சந்தோஷமாக வாழலாம் என ஆலோசனை கூறியுள்ளார்.

கள்ளக்காதல் ஜோடி திட்டம்
சுந்தரத்தின் பேச்சைக் கேட்ட அபிராமி கடந்த ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் ஒன்றாம் தேதி வரை தான் பெற்ற இரண்டு குழந்தைகளையும் பாலில் விஷம் கலந்தும் கழுத்தை நெரித்தும் துடிக்க துடிக்க கொன்றார். கணவரை கொல்ல கள்ளக்காதல் ஜோடி போட்ட திட்டம் தோல்வியடைந்தது.

பொறி வைத்து பிடித்த போலீஸ்
பொறி வைத்து பிடித்த போலீஸ் இதனால் இரவோடு இரவாக நாகர்கோவிலுக்கு எஸ்கேப்பானார் அபிராமி. அவரை கள்ளக்காதலனை வைத்தே பொறி வைத்து பிடித்தனர் போலீசார்.

கதறிய அபிராமி
தற்போது அபிராமியும் சுந்தரமும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நீதிமன்ற காவல் வரும் 12 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தன்னை ஜாமீனில் வெளியே எடுக்குமாறு தனது குடும்பத்தாரிடம் கூறும்படி சிறை அதிகாரிகளிடம் கதறினார் அபிராமி.

மன உளைச்சல்
ஆனால் அபிராமியின் குடும்பத்தினர் அவரை ஜாமீனில் வெளியே எடுக்கப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்தனர். குழந்தைகளையும் கொன்று, கணவர், கள்ளக்காதலன் பெற்றோர் என அனைவரையும் இழந்துள்ள அபிராமி கடுமையான மன உளைச்சலில் உள்ளதாக தெரிகிறது.

தற்கொலை முயற்சி?
இந்நிலையில் அபிராமி சிறைக்குள் திடீரென தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பட்டாவால் கழுத்தை நெரித்து அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

எதற்காக தற்கொலை முயற்சி?
இதனைக் கண்ட சிறை வார்டன் துப்பட்டாவை பிடுங்கி அபிராமியை காப்பாற்றியுள்ளார். குடும்பத்தினர் ஒதுக்கியதால் மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது குழந்தைகளை கொன்ற குற்ற உணர்வு தாங்காமல் அவர் தற்கொலைக்கு முயன்றாரா? என சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications