கன்னிப்பூ நெல் சாகுபடி: குமரி மாவட்டத்தில் 4 அணைகள் நாளை திறப்பு
கன்னியாகுமரி: கன்னிப்பூ நெல் சாகுபடிக்காக குமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு 1 சிற்றாறு 2 ஆகிய நான்கு அணைகளை நாளை திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளளார். கோதையாறு, பட்டணங்கால் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவதாகவும், இதனால் 79 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் எனவும் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்ட நெல் விவசாயத்தின் மிக முக்கிய நீராதாரமாக விளங்குவது பேச்சிப்பாறை அணை. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த அணை நூற்றாண்டை கடந்த பின்னும் வலுவோடு உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 48 அடி ஆகும்.

வழக்கமாக தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை காலங்களில் இந்த அணை நிரம்பி வழியும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சில தினங்களாக பெய்து வருவதால் அணை மளமளவென நிரம்பி வருகிறது.
இந்த அணை நீரை நம்பித்தான் குமரி மாவட்ட நெல் விவசாயிகள் கன்னிப்பூ சாகுபடியையும், கும்பப்பூ சாகுபடியையும் செய்கிறார்கள். அதன்படி கன்னிப்பூ சாகுபடி ஜூன் மாதம் நடைபெறும். அதற்காக பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.
பேச்சிப்பாறை அணையில் இருந்து கன்னிப்பூ சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 1ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஒருவார காலம் தாமதமாக தொடங்கியுள்ளதால் நாளை ஜூன் 11ம் தேதி முதல் பாசனத்திற்காக அணையை திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெருஞ்சாணி, சிற்றாறு 1, சிற்றாறு 2 அணைகளில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். கோதையாறு, பட்டணங்கால் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவதாகவும், இதனால் 79 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் எனவும் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications