குமரியில் தொடரும் கடல் சீற்றம்.. 2-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
கன்னியாகுமரியில் இன்றும் கடல் சீற்றத்துடனேயே காணப்படுகிறது
Recommended Video

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் இன்றும் கடல் சீற்றத்துடனேயே காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் இன்றும் 2-வது நாளாக கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும், எனவே, வரும் 30-ம் தேதி வரை குமரிக் கடல், மாலத்தீவு பகுதி, கேரளா மற்றும் கர்நாடக கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதற்கேற்றார்போல், ராமேஸ்வரம் அருகே மன்னார் வளைகுடா பகுதியில் நேற்று சூறைக்காற்றும், மணல் புயலும் கடுமையாக வீசியது. தனுஷ்கோடி அரிச்சல்முனை, முகுந்த ராயர்சத்திரம் பகுதிகளில் கடலின் அலை சுமார் 20 அடிக்கும் மேல் எழும்பி கடலோர மக்களுக்கு பீதியை கொடுத்தது.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சூறைக்காற்று காரணமாக, திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் வந்த பயணிகள் ரயில் ஒன்றும் பாம்பன் பாலம் அருகே நிறுத்தப்பட்டது. தமிழக - கேரள எல்லை பகுதியான வள்ளவிளை, மார்த்தாண்டம் துறை, பகுதிகளில் கடல் சீற்றத்தால் சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
இந்நிலையில் இந்திய கடல் தகவல் சேவை மையம் வெளியிட்டுள்ள நேற்று அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், குளச்சல் முதல் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வரை நாளை இரவு 11.30 வரை கடலில் 10 முதல் 15 அடி உயரத்திற்கு பேரலைகள் எழும்பும் என எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, சுமார் 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்றும் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீனவர்களின் நாட்டுப் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications