"போலீஸ் கஸ்டடிக்கு முகாந்திரம் இல்லை".. பத்ரி சேஷாத்ரிக்கு ஜாமீன் வழங்கிய குன்னம் நீதிமன்றம்
பெரம்பலூர்: மணிப்பூர் வன்முறை குறித்தும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் குறித்தும் கடுமையாக விமர்சித்ததாக கைது செய்யப்பட்ட பத்ரி சேஷாத்ரிக்கு ஜாமீன் வழங்கி குன்னம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
கும்பகோணத்தில் பிறந்தவர் பத்ரி சேஷாத்ரி. இவர் நாட்டில் நிலவி வரும் பிரச்சினைகள் குறித்து பேசி வருகிறார். இவர் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் மணிப்பூர் வன்முறை குறித்தும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் குறித்தும் கடுமையாக விமர்சித்திருந்தார். மணிப்பூர் கலவரம் குறித்த பேட்டி ஒன்றில் சர்ச்சைக்குரிய வகையில் இவர் கருத்து தெரிவித்திருந்ததாக தெரிகிறது.
இரு பிரிவினரிடையே வன்முறையை தூண்டும் வகையில் இவருடைய கருத்து இருந்ததால் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்தார். அதன்பேரில் பத்ரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மணிப்பூர் வன்முறையை மத்திய அரசு கட்டுப்படுத்தாவிட்டால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என தலைமை நீதிபதி சந்திர சூட் கூறியதற்கு பத்ரி அவதூறாக கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டார். அவர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு குன்னம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பத்ரியின் கைதுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக எம்எல்ஏ வானதி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் மணிப்பூர் விவகாரத்தில் பத்ரி பேசியது தவறு தான் என்ற போதிலும் அவரை கைது செய்தது கருத்துரிமைக்கு எதிரானதாகிறது. எனவே அவரை விடுவிக்க வேண்டும் என எழுத்தாளர்கள் பலர் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் குன்னம் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார் பத்ரி. அவருடைய ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பத்ரியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வேண்டும் என்றும் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் போலீஸ் தரப்பில் வாதம் செய்யப்பட்டது.
அப்போது நீதிபதி , பத்ரியை போலீஸ் கஸ்டடியில் எடுக்க முகாந்திரம் இல்லை, அதற்கான தேவையும் இல்லை என கூறி காவல் துறையின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, பத்ரி சேஷாத்ரிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications