கொலைக்கு போலீசை மட்டும் குறை சொல்லாதீங்க... மக்களும் துணிச்சலா போராடனும்- குஷ்பு
சென்னை: எங்கு கொலை நடந்தாலும் போலீசை குறை கூறாமல் மக்களும் துணிச்சலாக களத்தில் இறங்கி போராட வேண்டும் அன்றைக்குத்தான் இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த முடியும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொது செயலர் குஷ்பு கூறியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மர்மநபரால் வெட்டி கொலை செய்யப்பட்டார் சுவாதி. கொலையாளி யார் என்பது குறித்தோ, கொலைக்கான காரணம் குறித்தோ இதுவரை போலீஸ் நடத்திய விசாரணையில் தெரியவரவில்லை.

சுவாதியின் மரணம், அவரது குடும்பத்தினரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. தமிழிசை சவுந்தரராஜன், மு.க.ஸ்டாலின், ஹெச்.ராஜா ஆகியோர் சுவாதி வீட்டிற்கு சென்று ஆறுதல் தெரிவித்தனர்.
இன்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு இன்று சூளைமேட்டில் உள்ள சுவாதியின் வீட்டிற்கு சென்று அவரது தந்தையிடம் பேசி ஆறுதல் கூறினார். செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, சுவாதியின் கொலை குறித்து சமூக வலைதளத்தில் விருப்பம் போல் எழுதுவதற்கு கண்டனம் தெரிவித்தார்.
இதுபோன்ற சம்பவம் இனி நடக்கக்கூடாது. இது அரசு கையிலும், போலீஸ் கையில் மட்டும் இல்லை. மக்களின் கையிலும் உள்ளது என்றார். பரபரப்பான நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதிக்கு உதவ யாரும் வராதது வேதனைக்குரியது என்று கூறிய அவர், கொலை நடக்கும் இடத்தில் போலீஸ் மட்டும்தான் வந்து தடுத்து நிறுத்த வேண்டும் என்று மட்டும் எதிர்பார்க்காமல் மக்களும் களத்தில் இறங்கி போராட வேண்டும். அன்றைக்குத்தான் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாது என்றும் குஷ்பு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications