சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களுக்கு பொது மன்னிப்பு... குவைத் அரசு அறிவிப்பால் நிம்மதி!
குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களுக்கு அந்த நாட்டு அரசு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளது.
குவைத் : குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களுக்கு அந்த நாட்டு அரசு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளது. இதனால் பணி பெர்மிட் விசா இல்லாமல் தங்கி இருக்கும் இந்தியர்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளது. பிப்ரவரி 22ம் தேதி வரை இவர்களிடம் அபராதம் எதுவும் வசூலிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா, ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் வேலை தேடி அதிக அளவில் குவைத் செல்கின்றனர். கடந்த 40 ஆண்டுகளில் மட்டும் சுமார் 5 லட்சம் மக்கள் இங்கு வசிப்பதாக கூறப்படுகிறது. இவர்களில் சுமார் 50 ஆயிரம் தெலுங்கு மக்கள் குவைத் நாட்டில் தங்குவதற்கான ஆவணங்கள் இல்லாமல் இருப்பதாக தெரிகிறது. ஏஜென்ட்டுகள் மற்றும் குவைத்தில் உள்ள முதலாளிகளால் இவர்கள் விசா ஏமாற்றப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.

பணிபுரியும் நிறுவனத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, குடியுரிமை பெர்மிட்(அக்காமா) உள்ளிட்டவை இல்லாமல் குவைத்தில் தங்கி இருப்பவர்கள் சட்டவிரோத குடியேற்றத்தினர் என்று கருதப்படுகின்றனர், இவர்களுக்கு சிறைத்தண்டனை வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. அவர்கள் மேற்கொண்டு குவைத்தில் தங்க முடியாது உடனடியாக நாடு திரும்ப வேண்டும்.
கடந்த 2 நாட்களாக நூற்றுக்கணக்கான தெலுங்கு பேசும் மக்கள் குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பலர் நாடு திரும்ப விண்ணப்பித்துள்ளனர். இதன் அடிப்படையில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு அந்த நாட்டு அரசு பொதுமன்னிப்பு அளித்துள்ளது. ஜனவரி 29 முதல் பிப்ரவரி 22 வரை அவர்களுக்கு தண்டனையோ அபராதமோ விதிக்கப்படாது என்றும் குவைத் அரசு கூறியுள்ளது.
இந்தியர்கள் குவைத் அரசு அளித்துள்ள பொதுமன்னிப்பை பயன்படுத்தி பாதுகாப்பாக தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்ப வேண்டும் என்று கல்ஃப் தெலங்கானா நல மற்றும் கலாச்சார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கேட்டுக் கொண்டுள்ளார். சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்கள் இந்திய தூதரகத்திற்கு விண்ணப்பித்து நாட்டை விட்டு வெளியேறுவதற்கான விசாவை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications