சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களுக்கு பொது மன்னிப்பு... குவைத் அரசு அறிவிப்பால் நிம்மதி!
குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களுக்கு அந்த நாட்டு அரசு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளது.
குவைத் : குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களுக்கு அந்த நாட்டு அரசு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளது. இதனால் பணி பெர்மிட் விசா இல்லாமல் தங்கி இருக்கும் இந்தியர்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளது. பிப்ரவரி 22ம் தேதி வரை இவர்களிடம் அபராதம் எதுவும் வசூலிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா, ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் வேலை தேடி அதிக அளவில் குவைத் செல்கின்றனர். கடந்த 40 ஆண்டுகளில் மட்டும் சுமார் 5 லட்சம் மக்கள் இங்கு வசிப்பதாக கூறப்படுகிறது. இவர்களில் சுமார் 50 ஆயிரம் தெலுங்கு மக்கள் குவைத் நாட்டில் தங்குவதற்கான ஆவணங்கள் இல்லாமல் இருப்பதாக தெரிகிறது. ஏஜென்ட்டுகள் மற்றும் குவைத்தில் உள்ள முதலாளிகளால் இவர்கள் விசா ஏமாற்றப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.

பணிபுரியும் நிறுவனத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, குடியுரிமை பெர்மிட்(அக்காமா) உள்ளிட்டவை இல்லாமல் குவைத்தில் தங்கி இருப்பவர்கள் சட்டவிரோத குடியேற்றத்தினர் என்று கருதப்படுகின்றனர், இவர்களுக்கு சிறைத்தண்டனை வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. அவர்கள் மேற்கொண்டு குவைத்தில் தங்க முடியாது உடனடியாக நாடு திரும்ப வேண்டும்.
கடந்த 2 நாட்களாக நூற்றுக்கணக்கான தெலுங்கு பேசும் மக்கள் குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பலர் நாடு திரும்ப விண்ணப்பித்துள்ளனர். இதன் அடிப்படையில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு அந்த நாட்டு அரசு பொதுமன்னிப்பு அளித்துள்ளது. ஜனவரி 29 முதல் பிப்ரவரி 22 வரை அவர்களுக்கு தண்டனையோ அபராதமோ விதிக்கப்படாது என்றும் குவைத் அரசு கூறியுள்ளது.
இந்தியர்கள் குவைத் அரசு அளித்துள்ள பொதுமன்னிப்பை பயன்படுத்தி பாதுகாப்பாக தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்ப வேண்டும் என்று கல்ஃப் தெலங்கானா நல மற்றும் கலாச்சார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கேட்டுக் கொண்டுள்ளார். சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்கள் இந்திய தூதரகத்திற்கு விண்ணப்பித்து நாட்டை விட்டு வெளியேறுவதற்கான விசாவை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications