சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களுக்கு பொது மன்னிப்பு... குவைத் அரசு அறிவிப்பால் நிம்மதி!
குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களுக்கு அந்த நாட்டு அரசு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளது.
குவைத் : குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களுக்கு அந்த நாட்டு அரசு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளது. இதனால் பணி பெர்மிட் விசா இல்லாமல் தங்கி இருக்கும் இந்தியர்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளது. பிப்ரவரி 22ம் தேதி வரை இவர்களிடம் அபராதம் எதுவும் வசூலிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா, ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் வேலை தேடி அதிக அளவில் குவைத் செல்கின்றனர். கடந்த 40 ஆண்டுகளில் மட்டும் சுமார் 5 லட்சம் மக்கள் இங்கு வசிப்பதாக கூறப்படுகிறது. இவர்களில் சுமார் 50 ஆயிரம் தெலுங்கு மக்கள் குவைத் நாட்டில் தங்குவதற்கான ஆவணங்கள் இல்லாமல் இருப்பதாக தெரிகிறது. ஏஜென்ட்டுகள் மற்றும் குவைத்தில் உள்ள முதலாளிகளால் இவர்கள் விசா ஏமாற்றப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.

பணிபுரியும் நிறுவனத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, குடியுரிமை பெர்மிட்(அக்காமா) உள்ளிட்டவை இல்லாமல் குவைத்தில் தங்கி இருப்பவர்கள் சட்டவிரோத குடியேற்றத்தினர் என்று கருதப்படுகின்றனர், இவர்களுக்கு சிறைத்தண்டனை வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. அவர்கள் மேற்கொண்டு குவைத்தில் தங்க முடியாது உடனடியாக நாடு திரும்ப வேண்டும்.
கடந்த 2 நாட்களாக நூற்றுக்கணக்கான தெலுங்கு பேசும் மக்கள் குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பலர் நாடு திரும்ப விண்ணப்பித்துள்ளனர். இதன் அடிப்படையில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு அந்த நாட்டு அரசு பொதுமன்னிப்பு அளித்துள்ளது. ஜனவரி 29 முதல் பிப்ரவரி 22 வரை அவர்களுக்கு தண்டனையோ அபராதமோ விதிக்கப்படாது என்றும் குவைத் அரசு கூறியுள்ளது.
இந்தியர்கள் குவைத் அரசு அளித்துள்ள பொதுமன்னிப்பை பயன்படுத்தி பாதுகாப்பாக தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்ப வேண்டும் என்று கல்ஃப் தெலங்கானா நல மற்றும் கலாச்சார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கேட்டுக் கொண்டுள்ளார். சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்கள் இந்திய தூதரகத்திற்கு விண்ணப்பித்து நாட்டை விட்டு வெளியேறுவதற்கான விசாவை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications