"டுபாக்கூர்" டாக்டர் போட்ட ஊசியால் மதுராந்தகம் அருகே பெண் பரிதாப பலி
செங்கல்பட்டு: மதுராந்தம் அருகே போலி மருத்துவர் ஒருவரின் சிகிச்சையால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக அஞ்சலை என்பவர் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவருக்கு பவுஞ்சூரில் உள்ள மருத்துவர் ஒருவர் சிகிச்சையளித்துள்ளார். ஊசி போட்ட சில மணி நேரத்திலேயே அஞ்சலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து, போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் விஜயகுமார் போலி மருத்துவர் எனத் தெரிய வந்தது. இவர் பவுஞ்சூர் காவல் நிலையத்துக்கு அருகேயே பல வருடமாக கிளினிக் நடத்தியுள்ளார் என்பதும் திடுக்கிடும் செய்தியாக அமைந்துள்ளது.
இந்தச் சம்பவத்திற்கு பிறகு போலி மருத்துவரான விஜயகுமாரை பவுஞ்சூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications