For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடும்ப பிரச்சினை... எத்தில் ஆல்கஹாலை ஊற்றிக் கொண்டு தீக்குளித்து பெண் டாக்டர் தற்கொலை!

நெல்லையில் குடும்ப பிரச்சினை காரணமாக தலையில் எத்தில் ஆல்கஹாலை ஊற்றிக் கொண்ட பெண் மருத்துவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லையில் குடும்ப பிரச்சினை காரணாக மனமுடைந்த பெண் மருத்துவர் தீவைத்து தற்கொலை செய்துக் கொண்டார்.

திருநெல்வேலி, தாழையூத்து, இந்தியா சிமெண்ட்ஸ் ஆலையில் இன்ஜினியராக பணியாற்றுபவர் முரளி (55). இவரது மனைவி உஷாராணி (52). மருத்துவர்.

 A lady Doctor died after self immolation in Nellai

இந்தியா சிமெண்ட்ஸ் ஊழியர் குடியிருப்பில் வசிக்கின்றனர். தாழையூத்து சங்கர் நகரில் உஷாராணி கிளீனிக் நடத்தி வருகிறார். நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு ஏற்பட்டது.

இதனால் மனமுடைந்த உஷா ராணி வீட்டில் இருந்த "எத்தில் ஆல்கஹாலை " தலையில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனால் அங்கேயே தீயில் கருகி பலியானார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இவர்களது மகன் சாய் பிரசாத், சென்னையில் என்ஜினியரிங் கல்லூரியில் படிக்கிறார். மகள் ஸ்ரீமதி நாமக்கல்லில் பிளஸ் 2 படிக்கிறார். நடத்தையில் கணவன் சந்தேகப்பட்டதால் தற்கொலை செய்துள்ளதாக தெரிகிறது.

உஷாராணியின் தாயார் ரத்தினம் அம்மாள் புகாரின் பேரில் தாழையூத்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

English summary
Nellai lady doctor died after self immolation in the family issues.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X