மீனவர்கள் கைது: பிரதமருக்கு ஜெயலலிதா மீண்டும் கடிதம்!
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக அவர் பிரதமருக்கு எழுதி உள்ள கடிதத்தில், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு சிறைபிடிக்கப்படுவது தொடர்பாக தாம் இதற்கு முன்னரே பல கடிதங்களை எழுதி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தற்போது கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 140 தமிழக மீனவர்கள் 22 படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே 69 மீனவர்கள் இலங்கை சிறையில் வாடுகின்றனர்.
அவர்களது 47 படகுகள் இன்னமும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் அந்த கடிதத்தில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
எனவே பிரதமர் உடனடியாக இப்பிரச்னையில் தலையிட்டு தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications